இந்து சமய விளக்கம் 07.
கிருஷ்ணன் அல்லது கண்ணன் என்றழைக்கப்படும் தெய்வமூர்த்தம் பெண்களிடையே சிருங்கார லீலைகள் புரிவதுபோல் சித்திரிக்கப்படுவதன் காரணம் என்ன? கண்ணன், கிருஷ்ணன் எல்லாம் மஹாவிஷ்ணுவினுடைய அம்சம். மஹாவிஷ்ணுவுடைய கடமை உயிர்கள் வழிதவறிப் போய்விடாமல் பாதுகாப்பதுதான். அதுமட்டுமன்றி உலகின் நெறிமுறைகள் தளர்ந்து போகாதிருக்க அவ்வப்போது நடவடிக்கை எடுப்பவரும் மஹாவிஷ்ணுவே தான். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மஹாவிஷ்ணு மானுடராகப் பூமியில் தோன்றிப் பணிபுரிவதாக இந்துமதம் கூறுகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணராகத் தோன்றியதும் உலகின் தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டே என்பதை மறத்தல் கூடாது. இனிக் கண்ணனிடம் வருவோம். கண்ணன் இடையர் குலத்திலேயே வளர்ந்தவர். மானிடர்களுக்கும் தேவர்களுக்கும் இடைப்பட்ட நிலையில் கண்ணன் வாழ்ந்து காட்டினார் என்பதன் பொருளாகவும் இடையர்குலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். கண்ணன் வாழ்ந்த இடம் கோகுலம் எனப்படுகிறது. கோகுலம் என்பதன் பொருள் பசுக்களின் இடம் அல்லது குலம் என்பதாகும். இதன்படி கண்ணன் பசுக்களின் மத்தியில் வாழ்ந்திருக்கின்றான். இடையர் என்றவகையில் கோகுலத்தில்வாழும் ஒருவரின் கட...