இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்து சமய விளக்கம் 07.

கிருஷ்ணன் அல்லது கண்ணன் என்றழைக்கப்படும் தெய்வமூர்த்தம் பெண்களிடையே சிருங்கார லீலைகள் புரிவதுபோல் சித்திரிக்கப்படுவதன் காரணம் என்ன? கண்ணன், கிருஷ்ணன் எல்லாம் மஹாவிஷ்ணுவினுடைய அம்சம். மஹாவிஷ்ணுவுடைய கடமை உயிர்கள் வழிதவறிப் போய்விடாமல் பாதுகாப்பதுதான். அதுமட்டுமன்றி உலகின் நெறிமுறைகள் தளர்ந்து போகாதிருக்க அவ்வப்போது நடவடிக்கை எடுப்பவரும் மஹாவிஷ்ணுவே தான். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மஹாவிஷ்ணு மானுடராகப் பூமியில் தோன்றிப் பணிபுரிவதாக இந்துமதம் கூறுகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணராகத் தோன்றியதும் உலகின் தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டே என்பதை மறத்தல் கூடாது. இனிக் கண்ணனிடம் வருவோம். கண்ணன் இடையர் குலத்திலேயே வளர்ந்தவர். மானிடர்களுக்கும் தேவர்களுக்கும் இடைப்பட்ட நிலையில் கண்ணன் வாழ்ந்து காட்டினார் என்பதன் பொருளாகவும் இடையர்குலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். கண்ணன் வாழ்ந்த இடம் கோகுலம் எனப்படுகிறது. கோகுலம் என்பதன் பொருள் பசுக்களின் இடம் அல்லது குலம் என்பதாகும். இதன்படி கண்ணன் பசுக்களின் மத்தியில் வாழ்ந்திருக்கின்றான். இடையர் என்றவகையில் கோகுலத்தில்வாழும் ஒருவரின் கட...
பிந்துனுவௌ படுகொலைகள்.             25, அக்டோபர், 2000  (பிந்துனுவௌப் படுகொலைகளுக்கு உள்ளாகி மரணித்த எம் தமிழ் இரத்த உறவுகளை நினைவுகூருமுகமாக இது பற்றி கனடா ஐ.ரி.பி.சி. தமிழ்வானொலிக்கு 26.11.2000 அன்று குரல்வழியாக வழங்கப்பட்ட  எனது வாரசாரச் செய்திக்குறிப்பின் எழுத்துரு இது.)  மனிதப் படுகொலைகள் விடயத்தில் இலங்கைக்கு என்று எப்போதுமே உலகில் தனியிடம் உண்டு. தமிழர்களின் இறைச்சியைத் தின்றுதான் உயிர்வாழ்வோம் என்ற உயர்ந்த கோட்பாடு சிங்கள இனத்துக்கு இருக்கும்வரையில் இந்தத் தனியிடத்தை உலகின் எந்தச் சக்தியாலும் பறித்துவிட முடியாது. சிறைச்சாலைப் படுகொலைகளிற்கூட எப்போதும் நமதுநாடுதான் முன்னணியில் நிற்கிறது. அத்தனைச் சிறைச்சாலைப் படுகொலைகளும் தமிழர்களை அழிப்பதற்காக மட்டுமே நிகழ்த்தப்பட்டன என்பதும் ஒரு வரலாற்றுச் சிறப்புத்தான். 1983ல் வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகளில் இருந்த தமிழ்த் தடுப்புக்காவற் கைதிகளில் 53பேர் மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். நிராயுதபாணியான இவர்கள்மேல் தொடர்ந்து இரண்டு நாட்கள் தாக்குதல்கள் நடத்தப...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 5(2)

பதவியல் 5 (இரண்டாம் பகுதி) வேற்றுமை. நான்காம் வேற்றுமை. நான்காம் வேற்றுமை உருபு “கு” என்பதாகும். கொடை நோக்கத்துக்காக இவ்வுருபு அதிகம் பயன்படுத்தப்படுவதால் இதனைக் கொடைவேற்றுமை எனவும் அழைப்பர். கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், காரணம் முதலிய கருத்துகளுக்கு நான்காம்வேற்றுமை உருபு பயன்படுகிறது. இவ்வுருபு இன், அன், அக்(கு), உக்(கு) ஆகிய சாரியைகளைப் பெற்றும், சாரியையெதுவும் பெறாமலும் தன்பணியைச் செய்யுமியல்புடையது. வீட்டிற்கு, காட்டிற்கு என்பவற்றில் இன் சாரியை பெற்று வருகிறது. எதற்கு, அதற்கு, இதற்கு என்பவற்றில் அன் சாரியை பெற்று நிற்கிறது. நமக்கு, எமக்கு உனக்கு போன்ற இடங்களில் அக்(கு) சாரியை ஏற்கிறது அண்ணாவுக்கு, மாமாவுக்கு, தாத்தாவுக்கு என வருமிடத்து உக்(கு) சாரியை பெறுகிறது. வீட்டுக்கு, காட்டுக்கு, எதுக்கு, அதுக்கு, இதுக்கு என்பவற்றில் சாரியை ஏற்காமல் கருத்தைத் தருகிறது. இனி நான்காம் வேற்றுமையுருபு எவ்வெப் பொருள்களில் பயன்படுகின்றது என்பதைப் பார்ப்போம். கொடைப்பொருள்: அம்மா குழந்தைக்குப் பால் கொடுத்தார். செல்வந்தர் ஏழைகளுக்கு உணவிட்டார். அரசு ...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 5

பதவியல்  வேற்றுமை . (முதற்பகுதி) வாக்கியம் ஒன்றில் வருகின்ற பெயர்ச்சொற்களின் நிலையை அல்லது நோக்கத்தை வெளிப்படுத்துபவையாக வேற்றுமைகள் அமைகின்றன. வேற்றுமை உருபுகளைப் புறந்தள்ளின், சொல்ல வந்த கருத்துகள் முழுமையடையாமற் போய்விடவுங் கூடும். வேற்றுமைகள் எட்டு என்பர் இலக்கணநூலார். எட்டைவிட அதிகம் எனக் கூறுபவர்களும் உளர். மூன்றாம் வேற்றுமையை இரண்டாகக்கொள்ள இடமுண்டு என்பர் இவர்கள். எனினும், தொல்காப்பியம் நன்னூல் என்பவை வேற்றுமைகள் எட்டு என்கின்றன. ஆறுமுகநாவலர் அவர்களும் தமது இலக்கணச் சுருக்கத்தில் வேற்றுமைகள் எண்வகைத்தன என்பதையும் கருத்திற் கொள்வோம். இனி அவற்றைப் பார்ப்போம். முதலாம் வேற்றுமை. முதலாம் வேற்றுமைக்கு உருபுகள் எவையுங் கிடையா. இதனை எழுவாய் வேற்றுமை என்றும், பெயர் வேற்றுமை என்றும் அழைப்பர். வாக்கியத்தில் எழுவாயாக வருகின்ற பெயர்ச்சொல் எவ்வித மாற்றமுமின்றி அமைவது இதன் சிறப்பு. கணபதி வந்தான். சுந்தரன் பாடினான் .   என்பவற்றில் வருகின்ற கணபதி, சுந்தரன் ஆகியவற்றை முதலாம் வேற்றுமைக்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஆயினும் கணபதியானவன் வந்தான், கணபதியென்பவன்...

இந்து சமய விளக்கம் 06

மும்மூர்த்திகளின் வடிவங்கள் பற்றி…….? பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூர்த்தங்களே மும்மூர்த்திகள் என அழைக்கப்படுகின்றன. பரம்பொருளே பிரபஞ்ச இயக்கத்துக்காக மும்மூர்த்திகளைத் தோற்றுவிப்பதாக இந்துமதம் கூறுகிறது. இவர்களில் பிரமன் படைக்கும் தொழிலையும், விஷ்ணு காக்கும் தொழிலையும், உருத்திரன் அழிக்கும் தொழிலையும் பிரதான கடமைகளாகச் செய்கிறார்கள் என்று நமது மதம் கூறுகிறது. நல்லவற்றைக் உருவாக்குவதும், அவற்றைக் காப்பதும் முறையே பிரமனுடையதும் விஷ்ணுவுடையதும் கடமைகளாகின்றன. தீயவற்றை அழித்துப் பிரபஞ்சத்தை உய்விப்பது உருத்திரனின் பணியாகிறது. இத் திரிமூர்த்திகள் தத்தமது கடமைகளின்போது வெவ்வேறு தோற்றங்களைக் கொண்டிருந்தாலும் மூவரும் ஒருவரே என்று இந்துமதம் அழுத்தமாகக் கூறுகிறது. இன்றைய சமுதாய நோக்கில் இவற்றை நோக்குவோமானால், குடிசார்துறை, காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் சாயலை இங்கு காணலாம். குடிசார்துறை நல்லவற்றை ஆக்கிக் கொண்டிருக்கிறது. காவல்துறை அவ்வாக்கங்களுக்கு ஊறுநேராத வகையில் பாதுகாப்பளிக்கின்றது. நீதித்துறையோ நல்லவற்றுக்கு இடையூறாக அமைபவற்றைத் தண்டித்து ஒடுக்குகிறது.    ...