இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் திருக்கோணமலை. -- 7

எங்கள் திருக்கோணமலை. -- 7 அதிகாலை குருவியினம் ஆர்ப்பரித்துப் பறக்கும்  அமைந்ததொரு வயல்கண்டு அவைபாடிக் களிக்கும் மதியாளர் முயற்சிகளால் மண்ணின்வளம் பெருகும்  மண்டிநிற்கும் தேனருந்தி மந்தியினம் மகிழும் துதிபாடும் அந்தணரால் தூயசைவம் வளரும்  தீநெறியார் செய்கையெலாம் வலிகுன்றி மறையும் பதியாளும் கூனித்தீவுப் பத்ரகாளி அருளால்  பண்பான மக்கள்நலம் பெருகிவரும் திருவாய். ஆடிவரும் மாவலியாள் அடங்கிமறை கின்றநிலம்  அருளாளர் வழிநின்று அறங்காக்கும் தமிழர்நிலம் தேடிவந்து அகத்தியனார் அமர்ந்துதமிழ் ஆய்ந்தநிலம்  தெருவெங்கும் தமிழர்கலை பெருகிநிற்கும் அழகுநிலம் கோடிநலம் வருமெனினும் கொள்கைமாறாத் தூயர்நிலம்  கொட்டியா புரமென்று பெயர்வாய்ந்த வீரர்நிலம் ஓடிவந்த மக்களுக்கு உணவளித்த வள்ளல்நிலம்  ஒருதமிழன் வாழும்வரை ஓயமாட்டோம் என்றநிலம். தென்புலத்தில் அமர்ந்திருப்பான் வெருகலம்பதி வேலன்  தென்கயிலைக் கோணேசர் மாதுமையாள் பாலன் வன்பகையை எதிர்த்தெழுவாள் சம்பூர்க்காளித் தாயார்  வருபகையைத் துடைத்தெறிவான் மூதூர்வேழ வதனன் இன்பதியாய் இலங்குகின்ற முத்தூர்தமிழ...

தமிழ் இலக்கணம் அறிவோம் - 4 தொடரியல்;. 1

தமிழ் இலக்கணம் அறிவோம் - 4 தொடரியல்;. 1 தொடரியல் என்பது  சொற்களை ஒன்றுக்கொன்று முறைப்படி தொடர்புபடுத்தி நேர்த்தியான கருத்துடையதும் இலக்கணப் பிழையற்றதுமான வசனங்களை அமைத்தல்பற்றிப் பேசும் பகுதி எனலாம். தொடரியலை வாக்கியவியல் அல்லது வசனவியல் என்றும் அழைக்கலாம் . எவ்வளவு சொற்களை நாம் அறிந்திருந்தாலும், சொற்களின் நான்கு பிரதான பகுப்புகளான பெயர், வினை, இடை, உரி என்பவற்றை அடையாளப்படுத்தக் கூடியவர்களாக இருந்தாலும், அச்சொற்களைச் சரியான வகையில் ஒன்றோடொன்று இணைக்கும் முறையைத் தெரிந்திராவிட்டால் நாம் கருத்து எதனையும் தெரிவிக்க முடியாதவர்களாகவே இருப்போம். சொற்குவியல்கள் ஒருபோதும் வாக்கியமாவதில்லை. வாக்கியமாகாத எதுவும் நாம் நினைக்கும் கருத்தையும் வெளிப்படுத்தப் போவதில்லை. எனவே நாம் சொல்லவந்த கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சரியான முறையிற் சொற்களைக் கையாண்டு வசனங்களை அமைக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். . அதற்காக, வாக்கியமமைத்தல் என்பது ஏதோ கடினமான செயலென்று முடிவகட்ட வேண்டியதில்லை. சாதாரணமாக நாம் எல்லோரும் பேச்சவழக்கில் தினமும் பல்வேறு விதமான வாக்கியங்களை அமைத்துக் கொண்டுதான் ...

இராஜதுரை தர்மராஜா

இராஜதுரை தர்மராஜா (ஆயுள்வேத வைத்திய வித்தகர்) நேரில்வர முடியவில்லை  நினைத்தால்நெஞ்சம் தவிக்கிறது ஓரவிழி கசிகிறது  உள்மனமோ அழுகிறது நேரியனாய் வாழ்ந்தமகன்  நிலம்நீங்கிப் போனதாலே யாருமற்றுப் போனோமென்று  எங்கள்மண்ணும் கவல்கிறது. பேர்புகழுக் காசைப்படாப்  பெருந்தகையாய் வாழ்ந்தவன்நீ சீர்தமிழர் சிறப்புப்பெறத்  தினந்தினமும்; உழைத்தவன்நீ நேர்வழியைத் தவிர்த்தோரை  நீசரென அழைத்தவன்நீ பார்புகழும் எழுத்துகளால்  பலபேரை வென்றவன்நீ மலிவான விளம்பரத்தில்  மயங்காத மன்னவன்நீ தெளிவான பாதையிலே  தென்றலென வாழ்ந்தவன்நீ நிலவாக உயர்ந்துஎங்கள்  நெஞ்சமெலாம் நிறைந்தவன்நீ விலகாத நட்புக்கு  விளக்காக நின்றவன்நீ. மலைமண் ணிங்கழுகிறது  மைந்த:.உந்தன் பிரிவுகண்டு நிலைகுலைந்து போகிறது  நின்னுடலம் விலகிற்றென்று அலைகடலாய்க் கண்ணீர்சிந்தி  ஐயா உன்னை அனுப்பிவைத்தோம் அமைதிகொள்க அன்புநண்ப!  அனைவரும்உன் வழிவருவோம்.                     அனைத்து நண்பர்கள் சார்பாக  ...

எங்கள் திருக்கோணமலை – 6

எங்கள் திருக்கோணமலை – 6 நிலவொளி மணலிற்பட்டு  நீணிலம் நிலவாய்த்தோன்றும் தலைவனின் புகழைப்பாடித்  தமிழ்மொழி உயர்ந்துநிற்கும் அலைகடல் கரையில்மோதி  அணிமணி கொணர்ந்துசேர்க்கும் மலையுறை உமையாள்பாகன்  மகிழ்ந்தருள் புரிந்தேநிற்பர். இறைவழிப் பாடலோசை  இதயத்தை அள்ளிச்செல்லும் குறைவிலா துயிர்கள்வாழும்  கொள்கையைச் சைவம்சொல்லும் நிறைமதி மாந்தர்வழியில்  நின்றிடும் தமிழும்வெல்லும் அறவழி ஒன்றேமேவி  அனைத்தையும் நலமாய்க்கொள்ளும். அருள்மிகு முத்துக்குமரன்  அமர்ந்தருள் கோணைப்பதியில் வருதுயர் ஏதுமில்லை  வளர்தமிழுக் கெல்லையில்லை ஒருமனப் பட்டுஇங்கே  உயர்ந்திடும் தமிழர்கொள்கை திருபொழி கோணைமண்ணின்  சிறப்புக்கும் உண்டோஎல்லை? கந்தவனம் கோணேஸ்வரன் மார்கழி 2018.

எங்கள் திருக்கோணமலை -- 5

அலையோடிக் கரைமேவி ஆர்ப்பரித்து மகிழும்   ஆங்கூரும் வெண்சங்கு தடம்மாறிக் கவிழும் சிலைமாதர் விழிகண்டு மீனினங்கள் மயங்கும்   செங்கதிரின் வரவுகண்டு தூங்குபனி தயங்கும் கலைபூக்கும் கவின்சேர்க்கும் கல்வி உயரும்   கன்னித்தமிழ்க் கவிதையிங்கு ஆறாய்ப் பெருகும் நிலையான தருமநெறி நீடு வாழும்   நெடுந்தவத் தோர்களுரை எம்மை யாளும். வான்முட்டும் கோபுரங்கள் வண்ணங் கண்டு   வணங்காத கரங்கள்கூட வணங்கிச் செல்லும் தேன்சொட்டும் பூக்காடு வாசம் பெருக்கும்   தேனருந்தி வண்டுவழி மாறிப் பறக்கும் ஆன்மநெறிச் சிந்தனைகள் மலிந்து ஓங்கும்   அருளாளர் விழிச்சுனையில் அன்பு பொங்கும் மான்மந்தி பயமின்றி மகிழ்ந்தே பாயும்   மறத்தமிழர் வாழ்முறையில் தீமை சாயும். எல்லோரும் இன்புற்றே இருப்ப தென்ற   இசைவான கொள்கையிங்கு தழைத்த தாலே வல்லோர்கள் நல்லோராய் வாய்த்து நல்ல   வழிமுறையில் பண்பாடு காப்ப தாலே எல்லோர்க்கும் அருள்சுரக்கும் கோணை நாதர்   எங்கள்மண் குன்றுதேர்ந்து உறைந்த தாலே சொல்லரிய பேறுபெற்ற தெய்வ பூமி   திருக்கோண மலையெங்கள் சொர்க்க பூமி.   ...