இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்துசமய விளக்கம் 15

ஆன்மநேய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் எமது மதத்தில் மிருகங்களைப் பலியிடும் வழக்கம் எவ்வறு தோன்றியது? இதன் பொருள் என்ன? இந்துமதம் பரந்த சிந்தனையின் ஊற்றாகும். வழிபாட்டு முறையிலோ வேறு விடயங்களிலோ இறுக்கமான கட்டுப்பாடுகள் எவற்றையும் எவருக்கும் விதிக்கவில்லை. அடிப்படை விதிகளை வகுத்து வைத்திருக்கின்ற அதே நேரத்தில், உலக நடைமுறைக்கும் பக்தனின் இயல்புக்கும் ஏற்ப நெகிழ்ச்சித் தன்மையையும் அது அனுமதித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, கண்ணப்பநாயனார் தன் வாயிலிட்டுச் சுவைத்த இறைச்சியை இறைவனுக்கு நிவேதனமாகப் படைத்த செயலைக் குறிப்பிடலாம். இங்கே கண்ணப்பர் இறைவன்மேல் கொண்ட அன்பின்முன், ஆசார நடைமுறைகள் செயலிழந்து போகின்றன. ஆனால், அதற்காக நாமும் இறைச்சியைப் படைத்தாலென்ன என்று நினைப்பது பக்தியின் பாற்படாது. விதண்டா வாதத்தின் வகைப்பட்டு அகங்காரத்தில் வந்து நிற்கும். இந்த விஷயத்தை விளங்கிக் கொள்வதன்மூலம் மிருகங்களைப் பலியிடுவதன் தன்மையையும் ஓரளவு விளங்கிக் கொள்ளலாம். மனித மனத்துள் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் குடிகொண்டிருக்கின்றன. மற்றவரைக் கபடத்தால் வீழ்த்தும்போது நம்முள் நரி தலையெடுக...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

புணரியல் 2. வல்லினம் மிகும் இடங்கள்.  அந்த, இந்த, எப்படி, அப்படி, இப்படி ஆகியவற்றுள் யாதாகிலுமொன்று நிலைமொழியாக அமையுமிடத்து வருமொழி வல்லின எழுத்திற் தொடங்குமாயின் அவ்வல்லினம் மிகுந்து வரும். 1. அந்த +  பையன்  =  அந்தப்பையன்.                2. அந்த + சுனை    =  அந்தச்சுனை. 3. இந்த + சிறுமி     = இந்தச்சிறுமி.                 4. இந்த  + கட்டடம்   =  இந்தக்கட்டடம். 5. எப்படி + போனான்?  = எப்படிப்போனான்?       6. எப்படி + சிக்கியது?  = எப்படிச்சிக்கியது? 7. அப்படி + சென்றது.  =  அப்படிச்சென்றது.      8. அப்படி + கொடு.    =   அப்படிக்கொடு. 9. இப்படி + தந்தாள்.  =  இப்படித்தந்தாள்.        10. இப்படி + பாடு.     = இப்படிப்பாடு. அ, இ, உ , ஆகிய சுட்டெழுத்துகளையும், எ வினவெழுத்தையும் நிலைமொழி கொண்...

சைவநெறித் தத்துவம் -3

இறையின்  இயல்பு. இறையின் இயல்பை இத்தகையது என்று வார்த்தைகளிற் பகர முடியாதாயினும் பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் விளங்கிக்கொள்ளும் பொருட்டு அதன் இயல்புகள் சிலவற்றை சிவநெறி உரைக்க முற்படுகிறது. இறை தோற்றமும் ஒடுக்கமும் அற்றது. நுண்ணியவற்றுள் மிகநுண்ணியதாகவும், பெரியவற்றுள் மிகப்பெரியதாகவும் விளங்க வல்லது. பிரபஞ்சத்தை ஒடுக்கவும் விரிக்கவும் வல்ல ஆற்றல் கொண்டது. உயிர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றை மலத்தளையிலிருந்து மீட்டெடுத்துத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் சக்தி கொண்டது. இன்பதுன்பம் ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்படாதது. இன்னஉருவமுடையது என்றோ இன்ன அமைப்புக் கொண்டது என்றோ அடையாளங் காணமுடியாதது. ஆணென்றோ பெண்ணென்றோ அல்லது ஈரியல்பும் கொண்டதென்றோ கொண்டாட முடியாதது. உலகமாகவும் உலகத்துக்கு அப்பாலாகவும், பிரபஞ்சமாகவும் பிரபஞ்சங் கடந்ததாகவும் நிலைத்து நிற்பது. தோற்றமும் விரிவுமாகி ஒடுக்கமும் மறைவுமாகி ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்து நிற்பது. உயிருக்குள் உயிராகவும் உயிரை நெறிப்படுத்தும் திருவாகவும் செயல்படுவது. இறைவனை எண்குணத்தன் எனச் சிவநெறி உரைக்கிறது. தன்வயத்தனாதல், தூய உடம்பினனாத...

கல்வெட்டு - அமரர் இளையதம்பி பரமநாதன்.

        தோற்றம்.     27.06.1934                                                                                       மறைவு.      15.07.2018 அமரர் இளையதம்பி பரமநாதன். மறைவு தினப்பா. சீராளும் விளம்பியாண்டு சிறப்புநிறை ஆனித்திங்கள் நேராளும் பூர்வபக்கத் திருதியையே – பேராளும் இளையதம்பி பரமநாதன் இகம்புகழும் நல்லூரான் கழலடிசேர் நாளென் றியம்பு. துணைவிழைப்பா.               வான்நிலவு விளக்கேற்ற வண்ணமலர் அழகுமிழ                   வாய்மணக்கத் தமிழ்பேசும் நாடு               தேன்நிகர்த்த மாவலியாள் தென்றல்தலை சீவிவர     ...