இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 01

புணரியல் 1 இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்களோ ஒன்றோடொன்று இணைந்து கொள்வதைப் பற்றிய தெளிவைத் தருவது புணரியல் ஆகும். நிலைமொழி – வருமொழி. சொற்கள் ஒன்றோடொன்று இணையும்போது இணைப்பை எதிர்பார்த்திருக்கும் சொல் நிலைமொழி என்றும் வந்து இணைகின்ற சொல் வருமொழி என்றும் இலக்கணநூல் இயம்பும்.  மரம் - வேர் ஆகிய சொற்களை எடுத்துக்கொண்டால் மரம் என்பது இணைப்பை எதிர்பார்த்திருக்கும் சொல்லாகையால் அது நிலைமொழி என்றாகிறது.  வேர் இணைகின்ற சொல்லாகையால் வருமொழி எனவாகிறது. இயல்புப் புணர்ச்சி. இவ்வாறு இணையும் சொற்கள் இயல்பாக இணைவதுண்டு. இத்தகைய புணர்ச்சி இயல்புப் புணர்ச்சி என்று பெயர் பெறுகிறது.  தம்பி + வந்தான் ஆகிய இருசொற்களையும் எடுத்துக்கொண்டால் அவை இணையும்போது எந்தவித மாற்றத்தையும் பெறுவதில்லை. தம்பி வந்தான் என்றே எழுத வேண்டியிருக்கிறது.  எனவே இது இயல்புப் புணர்ச்சியின் பாற்படுகிறது. பூமரம், கலைவளம், கடல்வழி, பனைவெல்லம் என்பவையும் இயல்புப் புணர்ச்சியைச் சார்ந்தனவே. இயல்புப் புணர்ச்சியில், நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்து அமைந்து வருமொழியின் தொடக்க எழுத்து ...

சைவநெறித் தத்துவம் (2)

பதியின் ஐந்தொழில்களும் ஆன்ம ஈடேற்றமும். உயிர்களை உய்விக்கும் பொருட்டு இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களை ஆற்றுகிறார். ஒரே இறைவன் தான் ஆற்றுகின்ற தொழில்களுக்கு ஏற்றவாறு தோற்றங்களைப் பெறுகிறார்.  படைத்தற் தொழிலைப் பிரம்மா என்ற தோற்றத்தில் இறைவன் ஆற்றுகிறார். படைத்தல் என்பது ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு தனு கரண புவன போகங்களை ஆக்குதலாகும்.  தனு என்பது இறைவனால் ஆன்மாக்களுக்கு வழங்கப்படுகின்ற உடம்பு. கரணம் என்பது உடம்பால் ஆன்மாக்கள் உய்த்துணரக்கூடிய ஆற்றல்சார் உணர்வு. புவனம் என்பது பால்வெளி அடங்கலாகவும் அதற்கப்பாலுமாகவும் பரந்து விரிகின்ற பிரபஞ்சம். நமது உலகமும் இதிலடங்கும். போகம் என்பது தனு எனப்படும் உடலால் இவ்வுலகிற் பெறக்கூடிய அனுபவங்களும் அவற்றின் பலாபலன்களுமாம். தனு கரண புவன போகங்களைப் பயன்படுத்தி இறையுடன் இரண்டறக் கலத்தலே உயிர்களின் இறுதி இலக்கு. அதுவரையில் அவை தமது வினைகளுக்கேற்பப் பிறவிகளை எடுத்துக் கொண்டேயிருக்கும்.. புண்ணிய வினைகளைச் சேர்த்த ஆன்மாக்கள் சொர்க்கத்தை அனுபவிக்கலாம். பாவ வினைகளைச் சேர்த்த ஆன்மாக்கள் நரகத்த...

சைவநெறித் தத்துவம் (1)

சைவநெறியின்படி பதி பசு பாசம் ஆகிய முப்பொருளும் நிரந்தரமானவை. இவை ஒருபோதும் அழிவதில்லை. பதி என்பது இறைவன். பசு என்பது உயிர்கள் பாசம் எ ன் பது உயிரைப் பற்றியிருக்கும் மலங்கள். பதியாகிய இறைவன் ஒருவனே. அதனால் இறைவனுக்கு ஏகன் என்றும் பெயருண்டு. ஆயினும் உயிர்களுக்கு உதவும்பொருட்டு பதி பலதோற்றங்களைப் பெறுகிறது. பலதோற்றங்களைப் பெறுவதால் இறைவனுக்கு அநேகன் எனவும் பெயருண்டு. உயிர்கள் எண்ணிறந்தவை. இவை பிறப்பெடுப்பதன் நோக்கம் மலங்களின் பிடியிலிருந்து விடுபட்டு தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலப்பதேயாம். அனைத்து உயிர்களும் இறைவனுடன் சேரும்வரை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்குந் தன்மையின. பாசம் களையப்படவேண்டியது. பாசம் விட்டகன்றால்தான் உயிர்களுக்கு விமோசனம். பாசம் உயிர்களை அநாதியாகவே பீடித்திருக்கிறது. பாசத்துக்கு மலம் என்றும் பெயருண்டு. இந்தப் பெயரே அது அகற்றப்பட வேண்டியது என்ற கருத்தைத் தாங்கி நிற்கிறது. பாசம். அல்லது மலம் மூவகைப்படும். ஆணவம் கன்மம் மாயை என்பவையே அவை. ஆணவத்தை மூலமலம் என்றும் சொல்வர். உயிர்களை விட்டு ஆணவம் இலேசில் அகலாது. ஆணவம் ந...

இந்துசமய விளக்கம் 13

இறைவனுக்கு நைவேத்தியம் செய்வது, அழகான பூக்களைக் கொண்டு மாலையிடுவது, பூத்தூவுவது என்பவற்றின் நோக்கங்கள் என்ன? நைவேத்தியங்களை இறைவன் சாப்பிடுவதில்லையே… மலர்களும் வீணாகத்தானே போகின்றன…? இவை இறைவன்மேல் மனிதர்கள் கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாட்டுக்குக் கொடுக்கப்படும் உருவங்களாகும். நைவேத்தியத்தை இறைவன் உண்பதில்லை யென்பது சிறுகுழந்தைகளும் அறிந்த உண்மை. அப்படியிருக்க, காலங்காலமாக ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறோம் என்றால் அது எளிமையான, இனிமையான தத்துவத்தைக் கொண்டிருப்பதுதான். உங்களுக்கு ஒருவயது நிரம்பிய சிறுகுழந்தை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைக்கு நீங்கள்தான் உணவூட்டவேண்டும்: குளிப்பாட்ட வேண்டும்: தலைசீவ வேண்டும். ஆனால், குழந்தை தன் பிஞ்சுக்கரங்களால் தனக்குக் கிடைத்த உணவில், கையில் அள்ளக்கூடியதை எடுத்து உங்கள் வாயில் வைக்கும்போது, அதன் பாசத்தை எண்ணி நீங்கள் நெகிழ்ந்து போவதில்லையா? அந்த உணவை உண்பதால் நீங்கள் பசியாற முடியாது. அதுவுமல்லாது அது உங்களால் குழந்தைக்கென வழங்கப்பட்ட உணவின் சிறுபகுதியே. இவ்வாறிருக்க, உள்ளம் ஏன் நெகிழ்ந்து போகிறது? இங்கே உணவோ, அதன் பெறுமானமோ...