இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடப்பியற் சதகம் - வெண்பா 100

நடப்பியற் சதகம்; ( இன்னிசை வெண்பா ) ( இழிந்த நாட்டு நடப்புகளையும் சமுதாய அரசியற் நீர்கேடுகளையும் மனத்திருத்தி நாளுக்கொரு பாடலாக 20 மார்ச் 2018 தொடக்கம் 25 ஜுன் 2018 வரையிலான நிலைமைகளை அனுசரித்து அன்றன்று எழுதி முகநூலிற் பதிவேற்றம் செய்யப்பட்ட நூறு பாடல்களின்  தொகுப்பு இது. பதிவேற்றத்தின்போது பாடல்களுக்குத் தலைப்புகள் இடப்படவில்லையாயினும் தொகுப்பில் அக்குறை நீக்கப்பட்டிருக்கிறது.)                                               ஆக்கியோன் :    கந்தவனம் கோணேஸ்வரன்.                                                                                  திருக்கோணமலை.      ஓய்வுகால அரசியல்.    அறுபது வயதுவரை அரசுக்கு நல்லபிள்ளை ...

தமிழ் இலக்கணம் அறிவோம். - இயல் 02 - பகுதி 11-3

பதவியல் 2 பகுதி 11 – 3 ஆகுபெயர்.   (தொடர்ச்சி..) 13. கருத்தாவாகு பெயர். ஒரு படைப்பு அதன் கருத்தாவால் குறிப்பிடப்படும்போது அது கருத்தாவாகு பெயராகின்றது. இதை இன்னொரு விதமாகச் சொல்வதானால் கருத்தா தனது படைப்புக்கு ஆகி நிற்பதே கருத்தாவாகு பெயராகின்றது எனலாம். கம்பனைப் படித்துப்பார்: தமிழின் சுவை தெரியும். பாரதியை அறியாதான் தமிழை அறியாதானே. கார்ள்மாக்ஸைப் படிக்காமல்  அரசியல் பேசாதே. திருவள்ளுவரை உணர்ந்தவன் உலகையே உணர்ந்தவனாகிறான். மேற்போந்த வாக்கியங்களில், கம்பனைப் படித்தல் என்பது அவரது ஆக்கமான கம்பராமாயணத்தையும் பிற தனிப்பாடல்களையும் படித்துக் கவிச்சுவையை உணர்தல் என்பது பொருளாகிறது: பாரதியை அறியாதான் என்பதற்கு அவரது கவிதைகளை அறிந்திருக்காதவன் என்பதே கருத்தாகிறது: கார்ள்மாக்ஸைப் படித்தல் என்பது அவரது அரசியற் தத்துவங்களைத் தெளிவாக அறிதல் எனப் பொருள்படுகிறது: திருவள்ளுவரை உணர்தல் என்பது அவரது கருத்துகளைக் கூறுகின்ற திருக்குறளை உணர்ந்து படித்தல் என்பது விளக்கமாகிறது. எனவே கருத்தா ஒருவரால் ஆக்கப்பட்ட படைப்புகள் அவற்றின் சிறப்புக்கருதிக் கருத...

இந்துசமய விளக்கம் 12

இறைவனுக்கும் மனிதனுக்குமிடையிலான உறவு எத்தன்மையுள்ளதாக இருக்க வேண்டும்? இறைவனை அரசனாக மதிக்கலாம்: ஆண்டவனாகக் கொள்ளலாம்: அம்மா, அப்பாவாகப் போற்றலாம்: நல்லதொரு நண்பனாகப் பாராட்டலாம்: வேலைக்காரனாக மதித்து ஏவல்கூடச் செய்விக்கலாம். இதில் தவறேதுமில்லை. ஆனால், இந்த உறவுமுறைகள் எல்லாம் மாசற்ற அன்பின் நிமித்தம்தான் ஏற்பட வேண்டுமே யல்லால், அகங்காரத்தின் நிமித்தமன்று. இறைவனை அன்பினால் மட்டுந்தான் கட்டிப்போட முடியும். “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே..” என்று மாணிக்கவாசகர் கூறினார். “பித்தா..” என்று சுந்தரர் வைதார். “தாயினும் நல்ல தலைவர்..” என்றார் ஞானசம்பந்தர். தன்னைக் கண்ணனின் மனைவியாகப் பாவித்துக் கொண்டார் 'சூடிக்கொடுத்த நாச்சியார்' எனப்படும் ஆண்டாள். தோழனாக இறைவனைப் பாவித்த சுந்தரர், தான் பெற்ற நெல்லை வீட்டுக் கு  எடுத்துவந்து தரும்படி உத்தரவு போட்டு வேலை வாங்கினார். மதுரையில் வாழ்ந்த கூனற்கிழவி செம்மனச் செல்வியின் அன்பால் இறைவன் கூலியாளாகிப் பிட்டுக்காக மண்சுமந்து பிரம்படியும் பெற்றார். மகாகவி பாரதியார் இறைவனை வேலைக்காரனாக நினைத்துக் கவிதையும் பாடினார். இவையெல்லாம் இறைவன் ...

தமிழ் இலக்கணம் அறிவோம். - இயல் 02 - பகுதி 11-2

பதவியல் 2 பகுதி 11 - 2 ஆகுபெயர் .   (தொடர்ச்சி) 7. நீட்டலளவாகுபெயர். புடைவைக் கடைக்குச் செல்லும் ஒருவர், தனக்குரிய துணியைத் தேர்வு செய்துவிட்டு “மீற்றர் என்னவிலை?” என்று கேட்பாராகில் கடைக்காரர் வைத்திருக்கும் மீற்றர்ச் சட்டத்தைக் கேட்பதாக யாரும் கருத மாட்டார்கள். துணியைக் கேட்கிறார் என்றே பொருள் கொள்ளப்படும். அதேபோல் கயிறு வாங்க வருகின்ற ஒருவரும் கடைக்காரரிடம் “மீற்றர் என்ன விலை?” எனக் கேட்கக் கூடும். இங்கும் மீற்றர் எனுஞ்சொல் அளவைத்தடியைக் குறிக்காது. மாறாக கயிற்றைக் குறிக்கிறது. எனவே, மீற்றர் எனும் நீளத்துக்கான அளவு தன்னைக் குறிக்காமல் துணி, கயிறு என்பவற்றுக்கு ஆகிவருவதால் நீட்டலளவாகு பெயர் எனப்படுகிறது. தம்பி நூறு மீற்றரைக் குறுகிய காலத்துள் ஓடிமுடித்தான் எனும் வாக்கியத்தில் நூறுமீற்றர் என்பது  ஓடுதளத்தைக் குறிப்பதால் அதுவும் நீட்டலளவாகு பெயராகிறது. இந்தியத் தமிழகத்தையும் ஈழத்தமிழகத்தையும் பதினெட்டு மைல் பிரித்திருக்கிறது என்று கூறின் அது நீரிணையின் குறுக்களவைக் கூறுவதால் அது நீட்டலளவாகு பெயர் எனப்படுகிறது. எனவே, நீளத்தைக் குறிக்கின்ற அளவீடுக...