மனிதம் வளர்ப்போம்.

இணைக்குறள் ஆசிரியப்பா  (நிலாமுற்றம் கவிதை.)
(வெற்றிச் சான்றிதழ் பெற்றது. நடுவர் : இராம வேல்முருகள் வலங்கைமான்)

மனிதம் வளர்ப்போம்.

எல்லா உயிரும் எமதுறவே யெனும்
எண்ணம் கொள்வோம்
அல்லன தவிர்ப்போம்
நில்லா உலகில்
நிலையாய் நிற்கும் மனிதம் வளர்ப்போமே.

புல்லும் பூண்டும் கல்லும் உயிரெனப்
படித்தவர் நாமன்றோ
உள்ளம் குமைந்து
உயிரிகள் வாடா
வண்ணம் உயர்வாய் மனிதம் வளர்ப்போம்.

கந்தவனம் கோணேஸ்வரன்.
12.12.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5