அருள்மிகு கற்பகவிநாயகர் பக்திப் பதிகம்.

திருக்கோணமலை திருஞானசம்பந்தர் வீதியிலமர்ந்தருள் செய்கின்ற

அருள்மிகு கற்பகவிநாயகர் பக்திப் பதிகம்.


உமையாள் பாலகனே உலகத்து முதற்பொருளே
  உணர்வு கடந்து நிற்கும் பேரருளே
இமையோர் நாயகனே எங்கள்வி நாயகனே
  எமதுள்ளம் புகுந்து றைந்த கரிமுகனே
எமையாள் கணபதியே இனியதென் கயிலையிலே
  எழுந்தருளி அருள் புரியும் கற்பகமே
அமைய மனத்திருத்தி அடிதொழும் பக்தருக்கு
  அல்லலறுத் தானந்தம் அருள்செய்கு வாயே.         1



தேவாரப் பாடல்கொண்ட திருக்கோண மலையதனில்
  திருஞான சம்பந்தர் திருநாமத் தெருவினிலே
நாவாலும் மனத்தாலும் நல்லடியார் புகழ்ந் தேத்தும்
  நற்குஞ் சரக்கன்றே நற்றமிழர் கற்பகமே
மூவாத மூத்தவனே மூ~pகத்தி லமர்ந்தவனே
  முன்னின்று காரியங்கள் முடித்துதவுங் கணபதியே
பாவாரம் புனைந்தாடிப் பக்தியுடன் தொழுமடியார்
  பழவினைகள் தமையறுத் தருள்செய்கு வாயே.        2



மாதாபி தாவைச்சுற்றி மாம்பழத்தைப் பெற்றவனே
  மாபார தம்வரைய மருப்பொடீத்து நின்றவனே
வேதாக மங்களெல்லாம் வியந்தோங்கும் மூலவனே
  வித்துவக் கலைகளுக்கு வேராகி நிற்பவனே
ஆதார மாகநி;ன்று அண்டமெலாம் ஆள்பவனே
  ஐங்கரனாய் அடியவர்க்கு அபயகரம் தருபவனே
பாதார விந்தங்களைப் பரவித்துதிப் போர்கள்;தம்
  பாவ வினைகளைந் தருள்செய்கு வாயே             3



வயமிழந்த தேவர்கள் மும்முறை தலைகுட்டி
  வலம்வந்து பணிந்திருக்க மகிழ்ந்த அரக்கர்குலக்
கயமுகா சுரனவன் கருவந் தனையடக்கிக்
  காலடியிற் பணியவைத்து வாகனமாய் ஏற்றவரே
பயமின்றிப் பக்தர்தொழப் பாசத்தோ டரவணைக்கும்
  பார்வதியாள் பாலகனே பரம்பொருளே பிள்ளையாரே
உயர்வான உன்னதமே உன்னதத்தின் பேருருவே
 உருகும் அடியார்தமக் கருள்செய்கு வாயே.              4



தக்கன் யாகமதால் தாட்சா யினிவெள்கி
  தக்கதொரு பார்வதியாய் மலையரரையன் மகளாகி
நெக்குருகி நின்னுருவை நிலைசெய்து வழிபட்டு
  நீரிற் கரைத்துச்சிவ னாரை மணமுடித்து
பக்குவமாய்க கடைத்தேறப் பரிவுசெய்த கணபதியே
  பாசமங் குசத்தராய் வரமருளும் பிள்ளையாரே
எக்கணமும் உனைமறவா திதயத்தில் ஏத்துகின்ற
  அடியார்சஞ் சிதமற அருள்செய்கு வாயே.               5


ஆலடியில் அரசடியில் அமைந்தநல்ல மரநிழலில்
  அறுகம்புல் ஏறிநிற்கும் மஞ்சள்சாணம் சந்தனத்தில்
கோலமுகப் பிள்ளையென எழுந்தருளி இருப்பவனே
  கொழுக்கட்டை மோதகத்துப் பிரியனாகி நிற்பவனே
ஞாலமதைத் தோற்றுவித்துக் காத்தழித்து அருள்கின்ற
  ஞானவடி வானவரே முக்கண் விநாயகனே
சீலமுடன் நினதடியைத் தினம்வணங்கும் அடியார்தம்
  துயரறவே பழவினைகள் அகலவருள் வாயே.              6



காக்கை வடிவெடுத்துக் குறுமுனியின் கமண்டலத்தைக்
  கவிழ்த்துக் காவிரிநீர் கரைபுரளச் செய்தவனே
யாக்கையிற் சிறுவனாய்த் தமிழ்முனிமுன் நடமாடி
  ஐங்கரனாய் முன்தோன்றி அருள்செய்த கணபதியே
பாக்கள் வடிப்போர்க்குப் பற்றுருவாய் நிற்பவனே
  பாலச் சந்திரனே ஏகதந்த நாயகனே
பூக்கள் கொண்டுநிதம் துதிப்போரின் வினையறவே
  பிள்ளையாரே கணபதியே அருள்செய்கு வாயே           7



வேதம் வகுத்தளித்த  வியாசர் புராணந்தனை
  விளம்புதற் கருள்செய்து விக்கினங்கள் தீர்த்தவனே
நாதப் பரம்பொருளே ஞானவி நாயகனே
  நற்றமிழை ஒளவைக்கு அருளிய சற்குருவே
ஓதற் கரியவனே உயிர்த்துணையா யானவனே
  ஒருமனதோ டுளங்கசிந்து ஏத்து மடியாருன்
பாதம் பணிந்திடவே பழவினைகள் தமையறுத்து
  பக்குவ நிலையெய்த அருள்செய்கு வாயே.              8



சந்தோஷ நர்த்தனங்கள் ஆடிநின்ற வேளையிலே
   சந்திரனார் அதுகண்டு மெல்லச் சிரித்திடவே
வந்தவொரு சீற்றத்தை வரமாக்கி அவர்க்கருளி
  வளர்ந்தும் தேய்ந்தும் வனப்புப்பெற வைத்தவனே
இந்திரற்;கும் தேவர்கட்கும் இணையில்லா அதிபதியே
  இனியதம்பி முருகனுக்கு உதவிநின்ற பூபதியே
பந்தமறுந் துன்னடியார் பரவச நிலைபெறவே
  பாசவினை யறுத்தவர்க் கருள்செய்கு வாயே.              9



சித்திபுத்திவி  நாயகனே செல்வக் கணபதியே
  சிந்தையெல் லாமினிக்கும் செழுஞ்சுடரே கற்பகமே
எத்திசையும் புகழ்மணக்கும் எந்தையே கரிமுகனே
  ஏகதந்த வித்தகனே எங்கும் நிறைந்தவனே
நித்தமுமுன் பதம்போற்றி நெக்குருகும் பக்தர்துயர்
  நீர்க்குமிழி யெனமறைய அருள்கின்ற மன்னவனே
இத்தனைநாள் பட்டதுயர் இப்பறவி யோடொழிந்து
  எல்லோர்க்கும் பேரின்பப் பதமருளு வாயே.                10



கற்பகப் பிள்ளையார் பதமலர் போற்றி
  கஜமுகந் தாங்கிய இறைவனே. போற்றி
சொற்பதம் கடந்த தூயவா போற்றி
  சுந்தர நுதற்கண் கொண்டவா போற்றி
அற்புதத் திருவே ஐங்கரா போற்றி
  அண்டத்து மூலமாய் ஆனவா போற்றி
வெற்பினில் அமர்ந்தருள் புரிபவா போற்றி
  விண்ணவர் கோனே போற்றி போற்றி.


              கந்தவனம் கோணேஸ்வலன்
              04.01.2020






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5