வீழ்வேனென்று நினைத்தாயோ?
வீழ்வேனென்று நினைத்தாயோ?
வீழ்வேனென்று நினைத்தாயோ
வீணனே விலகிடுவாய்
வாழ்வதற்கே பிறந்தவர்கள்
வலிதாங்கத் தயங்குவரோ?
சூழ்நிலை உதவியதால்
சொர்க்கமே உனதென்று
ஆழ்மனதில் நினையாதே
அந்நிலையை மாற்றிடுவேன்.
போராடத் துணிந்தவர்க்குப்
புறச்சூழல் தடையாமோ?
நீரோடும் திசையேக
நிலையிழந்து போனோமோ?
எக்கணமும் நாட்டுக்காய்
இனியவெந் தாய்மொழிக்காய்
துக்கமின்றி உயிரளிக்கத்
துடிக்கின்ற நெஞ்சமிது.
நல்லவற்றை ஏற்றுகையில்
நான்சரிந்தால் சிரிப்பாயோ..
வல்லவனாய் எழுந்திடுவேன்
வரலாறு படைத்திடுவேன்.
கந்தவனம் கோணேஸ்வரன்
18.01.2020
வீழ்வேனென்று நினைத்தாயோ
வீணனே விலகிடுவாய்
வாழ்வதற்கே பிறந்தவர்கள்
வலிதாங்கத் தயங்குவரோ?
சூழ்நிலை உதவியதால்
சொர்க்கமே உனதென்று
ஆழ்மனதில் நினையாதே
அந்நிலையை மாற்றிடுவேன்.
போராடத் துணிந்தவர்க்குப்
புறச்சூழல் தடையாமோ?
நீரோடும் திசையேக
நிலையிழந்து போனோமோ?
எக்கணமும் நாட்டுக்காய்
இனியவெந் தாய்மொழிக்காய்
துக்கமின்றி உயிரளிக்கத்
துடிக்கின்ற நெஞ்சமிது.
நல்லவற்றை ஏற்றுகையில்
நான்சரிந்தால் சிரிப்பாயோ..
வல்லவனாய் எழுந்திடுவேன்
வரலாறு படைத்திடுவேன்.
கந்தவனம் கோணேஸ்வரன்
18.01.2020
கருத்துகள்
கருத்துரையிடுக