ஆசைக்குணம்.

ஆசைக்குணம்.

கோபப்படும் வேளையில்நீ கொவ்வைப்பழம் - மனதால்
கொஞ்சுகின்ற போதினிலே கொய்யாப்பழம்
பாசம் நெஞ்சில் வைக்குமினம் பெண்ணினம் - வைத்தால்
பாடைவரை கூடவரும் பொன்மனம்.

தாவுகின்ற விழியிரண்டும் நாவற்பழம் - நாவோ
தட்டைச்சளை யாகவந்த பலாப்பழம்
கோவையிதழ் குவிந்தால்துண்டு வாழைப்பழம் - உன்னைக்
கொண்டணைத்தால் மகிழுமிந்த ஏழையுளம்.

கனிகள்நிறைந்த சோலைதானுன் தேகவனம்  - எந்தன்
கண்களிலே சூடுகின்ற மோகவனம்
இனியபழம் அத்தனையும் உந்தன்வசம் - அதற்காய்
ஏங்குகின்ற பேதைமனம் எந்தன்வசம்.

ஆசையென்றும் சூழல்பார்த்து வருவதில்லை – அதை
அணைக்கநினைத்த போதுமது அழிவதில்லை
தேசமெங்கும் ஓர்குணந்தான் ஆசைக்குண்டு – தன்
தேவைதனைக் கேட்டுநிற்கும் துணிவுகொண்டு.

கந்தவனம் கோணேஸ்வரன்
(தினமுரசு பத்திரிகையில் வெளிவந்த கவிதை. ஆண்டு நினைவிலில்லை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5