சட்டத்தினால் யாது பயன்?

வெள்ளிச்சாரல் அமுதமழைக் கவிக்களஞ்சியம்

சட்டத்தினால் யாது பயன்?


நீதியென்றால் என்னவென்பர்
 எங்கள் ஊரிலே
மோதிப்பார்த்து வெல்பவர்தான்
 தங்கத் தேரிலே

மடிச்சுக்கட்டும் வேட்டிதானே
 நீதியைச் சொல்லும்
துடித்துவீழ்ந்த மனிதர்நியாயம்
 தனிவழி செல்லும்

மணலையள்ளி விற்பவன்தான்
 சட்டம் செய்கிறான்
அணைந்துபோக மறுப்பவனை
 அடித்துக் கொல்கிறான்

நீதிகூடப் பணம்படைத்தோர்
 பக்கமே நிற்கும்
ஏதிலியாய்க் கைபிசைவோர்
 வழக்குகள் தோற்கும்

ஆட்சியினர் என்றவார்த்தை
 அருவருப் பாச்சு
மீட்சியில்லா வாழ்வுதானே
 மக்கள்சொத் தாச்சு

சட்டம்படித்த ஐயாமாரே
 நிமிர்ந்து பாருங்கள்
சட்டத்தினால் என்னபயன்
 என்று  கூறுங்கள்.

கந்தவனம் கோணேஸ்வரன்
03.01.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5