கவிதைக்குத் தேவை எளிமையே. .
கவிதைக்குத் தேவை எளிமையே. (வெற்றிச் சான்றிதழ் பெற்றது)
தமிழ் வணக்கம்.
என்னை ஆளாக்கி இவ்வரங்கில் வைத்தவென்றன்
அன்னைத் தமிழுக்கு அகம்நிறைந்த என்வணக்கம்.
தலைமை வணக்கம்.
இனிய கவியரங்கை இயற்றிச் சிறப்பிக்கும்
புனிதத் தலைமைக்குப் புரிந்தேன்நான் நல்வணக்கம்.
அவைவணக்கம்.
என்கவியும் ஒருகவியாய் இவ்வரங்கில் அமைவதற்கு
நன்மனத்த ராயிருக்கும் அவையோர்க்கும் என்வணக்கம்.
துணைத்தலைப்பு.
கவிதை சிறக்கச்சொல் பொருளோ டிலக்கணமும்
அவசியமே யாயினும் எளிமையின்றேல் கவிதையேது?
எளிமையே சிறப்புஎனும் என்கருத்தைச் சொல்கின்றேன்
விழிப்புடனே கேளுங்கள்: வேண்டும்வகை முடிவெடுங்கள்.
என்னதான் சொல்நயமும் பொருள்நிறைவும் இருந்தாலும்
எளிமையொன் றில்லையெனின் கவிதைதனை யார்புரிவார்?
சின்னச்சொல் எளிமையுடன் கவிதைகளைப் படைத்ததாற்றான்
சுப்பிர மணியம்என்பான் பாரதியாய் உயர்ந்துநின்றான்.
வண்ண இசைக்கேற்ப வார்த்தைகளை விளங்கும்படி
எண்ணம்போல் தெளித்ததனால் கண்ணதாசன் அரசுஆனான்
இன்னும்நான் சொல்லப்புகின் நாமக்கல் லான்படைத்த
“கத்தியின்றி ரத்தமின்றி..” கவிதைக்கு ஈடுமுண்டோ?
சின்னச் சொல்லெடுங்கள் சறப்பாகக் கவிதொடுங்கள்
பென்னம் பெருங்கருத்தைப் பக்குவமாய்ப் புகுத்துங்கள்
வன்னச் சிறார்வாயில் வழங்கும்படி செய்யுங்கள்
அன்னைத் தமிழுக்கு அணிசேர்த்துச் செல்லுங்கள்.
நாட்டார் கவியனைத்தும் எளிமைதந்த பரிசன்றோ
நம்வீட்டார் நாவசைப்பும் தாலாட்டு ஆனதன்றோ
கேட்போர் செவியினிக்கும் கவிச்சுரங்கம் இவையன்றோ
எளிமை இருந்தாலே கவிதைக்குச் சுவையன்றோ?
நன்றி.
வாய்ப்பளித்த கவிப்பெரியீர் அனைவருக்கும் நன்றி
வாசமுடைக் கவிபடைத்த கவிஞருக்கும் நன்றி
கேட்பவர்க்கும் பார்ப்பவர்க்கும் ரசிப்பவர்க்கும் நன்றி
கவிச்சிறப்பு எளிமையிற்றான் என்பவர்க்கும் நன்றி;
கந்தவனம் கோணேஸ்வரன்.
14.12.2019
தமிழ் வணக்கம்.
என்னை ஆளாக்கி இவ்வரங்கில் வைத்தவென்றன்
அன்னைத் தமிழுக்கு அகம்நிறைந்த என்வணக்கம்.
தலைமை வணக்கம்.
இனிய கவியரங்கை இயற்றிச் சிறப்பிக்கும்
புனிதத் தலைமைக்குப் புரிந்தேன்நான் நல்வணக்கம்.
அவைவணக்கம்.
என்கவியும் ஒருகவியாய் இவ்வரங்கில் அமைவதற்கு
நன்மனத்த ராயிருக்கும் அவையோர்க்கும் என்வணக்கம்.
துணைத்தலைப்பு.
கவிதை சிறக்கச்சொல் பொருளோ டிலக்கணமும்
அவசியமே யாயினும் எளிமையின்றேல் கவிதையேது?
எளிமையே சிறப்புஎனும் என்கருத்தைச் சொல்கின்றேன்
விழிப்புடனே கேளுங்கள்: வேண்டும்வகை முடிவெடுங்கள்.
என்னதான் சொல்நயமும் பொருள்நிறைவும் இருந்தாலும்
எளிமையொன் றில்லையெனின் கவிதைதனை யார்புரிவார்?
சின்னச்சொல் எளிமையுடன் கவிதைகளைப் படைத்ததாற்றான்
சுப்பிர மணியம்என்பான் பாரதியாய் உயர்ந்துநின்றான்.
வண்ண இசைக்கேற்ப வார்த்தைகளை விளங்கும்படி
எண்ணம்போல் தெளித்ததனால் கண்ணதாசன் அரசுஆனான்
இன்னும்நான் சொல்லப்புகின் நாமக்கல் லான்படைத்த
“கத்தியின்றி ரத்தமின்றி..” கவிதைக்கு ஈடுமுண்டோ?
சின்னச் சொல்லெடுங்கள் சறப்பாகக் கவிதொடுங்கள்
பென்னம் பெருங்கருத்தைப் பக்குவமாய்ப் புகுத்துங்கள்
வன்னச் சிறார்வாயில் வழங்கும்படி செய்யுங்கள்
அன்னைத் தமிழுக்கு அணிசேர்த்துச் செல்லுங்கள்.
நாட்டார் கவியனைத்தும் எளிமைதந்த பரிசன்றோ
நம்வீட்டார் நாவசைப்பும் தாலாட்டு ஆனதன்றோ
கேட்போர் செவியினிக்கும் கவிச்சுரங்கம் இவையன்றோ
எளிமை இருந்தாலே கவிதைக்குச் சுவையன்றோ?
நன்றி.
வாய்ப்பளித்த கவிப்பெரியீர் அனைவருக்கும் நன்றி
வாசமுடைக் கவிபடைத்த கவிஞருக்கும் நன்றி
கேட்பவர்க்கும் பார்ப்பவர்க்கும் ரசிப்பவர்க்கும் நன்றி
கவிச்சிறப்பு எளிமையிற்றான் என்பவர்க்கும் நன்றி;
கந்தவனம் கோணேஸ்வரன்.
14.12.2019
கருத்துகள்
கருத்துரையிடுக