நேர்கொண்ட பார்வை.
நேர்கொண்ட பார்வை.
(வைரநிலாச் சான்றிதழ் பெற்றது)
நேர்கொண்ட பார்வையும் நிமிர்நன் னடையும்
கூர்கொண்ட மீசையும் குங்குமத் திலகமும்
சீர்கொண்ட தலைப்பா சிந்திடும் அழகும்
யார்க்கிங் குளவோ பாரதி போலே?
உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும் அமுதம்
பதிக்கும் பாக்களில் போர்க்குணம் அதிகம்
புதிதாய்த் தமிழை ஆக்கிக் கவிதையைப்
பொதுவில் வைத்திட்ட புரட்சியின் சிகரம்.
பண்டிதத் தமிழை விடுத்துப் புதுநெறி
கண்டதைப் பாக்களில் கவினுற வைத்தவன்
மண்டியிடா தொரு போர்க்குணம் கொண்டவன்
எண்டிசை யதிர விடுதலைக் குழைத்தவன்.
பெண்கள் அடிமைப் படுதலைத் தடுத்தவன்
கண்களிற் பேதம் யாதெனக் கேட்டவன்
திங்களும் பரிதியும் பொதுவெனச் சொன்னவன்
பொங்கியே சாதிப் பேய்தனை எதிர்த்தவன்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
12.12.2019
(வைரநிலாச் சான்றிதழ் பெற்றது)
நேர்கொண்ட பார்வையும் நிமிர்நன் னடையும்
கூர்கொண்ட மீசையும் குங்குமத் திலகமும்
சீர்கொண்ட தலைப்பா சிந்திடும் அழகும்
யார்க்கிங் குளவோ பாரதி போலே?
உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும் அமுதம்
பதிக்கும் பாக்களில் போர்க்குணம் அதிகம்
புதிதாய்த் தமிழை ஆக்கிக் கவிதையைப்
பொதுவில் வைத்திட்ட புரட்சியின் சிகரம்.
பண்டிதத் தமிழை விடுத்துப் புதுநெறி
கண்டதைப் பாக்களில் கவினுற வைத்தவன்
மண்டியிடா தொரு போர்க்குணம் கொண்டவன்
எண்டிசை யதிர விடுதலைக் குழைத்தவன்.
பெண்கள் அடிமைப் படுதலைத் தடுத்தவன்
கண்களிற் பேதம் யாதெனக் கேட்டவன்
திங்களும் பரிதியும் பொதுவெனச் சொன்னவன்
பொங்கியே சாதிப் பேய்தனை எதிர்த்தவன்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
12.12.2019
கருத்துகள்
கருத்துரையிடுக