பாரதி ஓர் அணையா நெருப்பு.
(அமுதமழைக் களஞ்சியம்.) (சான்றிதழ் பெற்ற கவிதை)
பாரதி என்றொரு பாவலன் பிறந்தனன்
பாரதம் தனைக் காக்க - அவன்
ஆர்வல னாயியன் அருந்தமிழ் மொழியை
அவனியில் உயர்த்தி வைக்க – தமிழ்
சீர்பெறும் வகையினில் சிறப்புடன் கவிதைகள்
செய்தனன் புவி வியக்க – விழி
நேர்தரு பார்வையில் நெருப்பென நின்றன
நீசர்கள் தமை வதைக்க – எழிற்
கூர்மிகு மீசையும் கொள்செந் திலகமும்
கொன்றன மடைமை களை – அவன்
பேர்தனைச் சொல்கையில் பேதைமை மறைந்தது
பெருந்தீ எழுந்தது பாராய்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
(அமுதமழைக் களஞ்சியம்.) (சான்றிதழ் பெற்ற கவிதை)
பாரதி என்றொரு பாவலன் பிறந்தனன்
பாரதம் தனைக் காக்க - அவன்
ஆர்வல னாயியன் அருந்தமிழ் மொழியை
அவனியில் உயர்த்தி வைக்க – தமிழ்
சீர்பெறும் வகையினில் சிறப்புடன் கவிதைகள்
செய்தனன் புவி வியக்க – விழி
நேர்தரு பார்வையில் நெருப்பென நின்றன
நீசர்கள் தமை வதைக்க – எழிற்
கூர்மிகு மீசையும் கொள்செந் திலகமும்
கொன்றன மடைமை களை – அவன்
பேர்தனைச் சொல்கையில் பேதைமை மறைந்தது
பெருந்தீ எழுந்தது பாராய்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக