பாரதி ஓர் அணையா நெருப்பு.

(அமுதமழைக் களஞ்சியம்.) (சான்றிதழ் பெற்ற கவிதை)


பாரதி என்றொரு பாவலன் பிறந்தனன்
 பாரதம் தனைக் காக்க -  அவன்
ஆர்வல னாயியன் அருந்தமிழ் மொழியை
 அவனியில் உயர்த்தி வைக்க – தமிழ்
சீர்பெறும் வகையினில் சிறப்புடன் கவிதைகள்
 செய்தனன் புவி வியக்க – விழி
நேர்தரு பார்வையில் நெருப்பென நின்றன
 நீசர்கள் தமை வதைக்க – எழிற்
கூர்மிகு மீசையும் கொள்செந் திலகமும்
 கொன்றன மடைமை களை – அவன்
பேர்தனைச் சொல்கையில் பேதைமை மறைந்தது
 பெருந்தீ எழுந்தது பாராய்.


கந்தவனம் கோணேஸ்வரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5