உழவுக்குக் கைகொடு.

உழவுக்குக் கைகொடு.

 (நிலாமுற்றக் கவிதை)


உழவுத் தொழிலை வந்தனை செய்தால்
 உலகம் செழிக்கும் புரிஞ்சுக்கோ
மழலை போலே விளையும் பயிரை
 மனதால் அணைக்கத் தெரிஞ்சுக்கோ
கழனி விதைத்துக் கண்ணெனக் காத்துக்
 கதிரை அறுத்து வருமட்டும்
உழவன் பாட்டை எண்ணிப் பார்த்தால்
 உழவுக்குக் கைகொடு என்போமே.


ஆடல் பாடல் அனைத்தும் நிற்கும்
 உழவன் சோறிட மறுத்தால்
கூடல் குலவல் எல்லாம் நீங்கும்
 கழனிகள் விளைந்திடா திருந்தால்
தேடல் எல்லாம் உணவின் பின்பே
 என்பதை அனைவரும் உணர்ந்தால்
ஓடிச் சென்று உழவுக்குக் கைகொடு
 என்போர் உலகில் உயர்ந்தோரே.


கந்தவனம் கோணேஸ்வரன்.

12.11.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5