மூக்குக் கண்ணாடி.
மூக்குக் கண்ணாடி.
வேண்டும் ஒரு மூக்குக் கண்ணாடி
மகனிடம் கேட்டேன்
சம்பளம் வரட்டும் பார்க்கலாம் என்றான்
சம்பளத்தை அவன் பார்ப்பான்
மூக்குக் கண்ணாடியை நான் பார்ப்பேனா?
மகளிடம் கேட்டேன்
இப்போதைக்கு என்ன அவசரம்…..?
ஒரே பேச்சில் மூக்கு – கண்ணாடியாய் நொருங்கியது.
மனைவியிடம் வாய்விட்டேன்
கிழவனுக்கு ஆசையைப் பார்..
கீரைபோல் உடைத்துப் பொட்டாள் மனதை.
பேர்த்தியிடம் மனம் விட்டேன்
வாய்விட்டுச் சிரித்தாள்
கண்ணாடியுடன் தாத்தா அழகாக இருப்பார்…..
பிஞ்சுவாயால் சொன்னாள்
“உன் பேர்த்தியின் கண்கள் கவிதை பேசுகின்றன:
அடடா அடடா.”
வீட்டுக்க வந்த கவிஞன் -- கண்ணாடி நண்பன்
பெருமிதமாய்ச சொன்னானே….
ஆந்த அழகைத் துல்லியமாய் அள்ளிப்பருக
அந்த விழியில் வழியும் மொழியை ரசிக்க
எனக்கு யார் தருவார் மூக்குக் கண்ணடி?
கந்தவனம் கோணேஸ்வரன்.
வீரகேசரி வாரவெளியீடு 24.10.2004
வேண்டும் ஒரு மூக்குக் கண்ணாடி
மகனிடம் கேட்டேன்
சம்பளம் வரட்டும் பார்க்கலாம் என்றான்
சம்பளத்தை அவன் பார்ப்பான்
மூக்குக் கண்ணாடியை நான் பார்ப்பேனா?
மகளிடம் கேட்டேன்
இப்போதைக்கு என்ன அவசரம்…..?
ஒரே பேச்சில் மூக்கு – கண்ணாடியாய் நொருங்கியது.
மனைவியிடம் வாய்விட்டேன்
கிழவனுக்கு ஆசையைப் பார்..
கீரைபோல் உடைத்துப் பொட்டாள் மனதை.
பேர்த்தியிடம் மனம் விட்டேன்
வாய்விட்டுச் சிரித்தாள்
கண்ணாடியுடன் தாத்தா அழகாக இருப்பார்…..
பிஞ்சுவாயால் சொன்னாள்
“உன் பேர்த்தியின் கண்கள் கவிதை பேசுகின்றன:
அடடா அடடா.”
வீட்டுக்க வந்த கவிஞன் -- கண்ணாடி நண்பன்
பெருமிதமாய்ச சொன்னானே….
ஆந்த அழகைத் துல்லியமாய் அள்ளிப்பருக
அந்த விழியில் வழியும் மொழியை ரசிக்க
எனக்கு யார் தருவார் மூக்குக் கண்ணடி?
கந்தவனம் கோணேஸ்வரன்.
வீரகேசரி வாரவெளியீடு 24.10.2004
கருத்துகள்
கருத்துரையிடுக