தெய்வமாய் உறைவான்.

தெய்வமாய் உறைவான்.

நிகழ்போழ்தில் இறந்தேனும் சமூகத்தை உயர்த்தியோன்
 எதிர்கால வாழ்வுக்கு இலக்காவான்
புகழ்போதை புரட்டலில் பெருமிதங் கண்டவன்
 புழுப்போலே அக்கணமே சாவான்.

சரியான வார்த்தையைச் சொல்கின்ற அறிஞன்
 சரித்திரம் கடந்துமே நிற்பான்
மரியாதை மாலைக்காய் மனச்சாட்சி அழிப்பவன்
 மண்ணோடு மண்ணாகிப் போவான்.

அதிகாரம் இருக்கையில் அனைவருக்கு மானவன்
 அவனியில் என்றுமே உயர்வான்
சதிகாரன் சுயநலமி தற்பெருமை மிக்கோன்
 சாத்தானின் வழியேகிப் போவான்.

இனிதான வாக்கியன் இன்முகன் செயல்வலன்
 என்றுமே மக்களில் நிறைவான்
மனிதாபி மானமும் மகிழ்ச்சியும் கொண்டவன்
 மனங்களில் தெய்வமாய் உறைவான்.

கந்தவனம் கோணேஸ்வரன்.
26.08.1996

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5