ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்.
ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்.
--கந்தவனம் கோணேஸ்வரன்--
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒரு முடிவை எடுத்தாயிற்று. தேர்தலில் நிற்க முடிந்தவர்கள் நிற்க ஏனையோர் யாரை ஆதரிப்பது என்பதுபற்றியும்ää தேர்தலைப் புறக்கணிப்பது பற்றியும் தத்தம் முடிவை மக்கள்மத்தியில் முன்வைத்து விட்டார்கள். வடபகுதியின் முன்னாள் முதலமைச்சர் விரும்பியவர்களை ஆதரிக்கலாம் என்றும் விட்டு விட்டார்.
இந்த முடிவுகளை யாரும் பிழைசொல்ல முடியாது. அவரவர்கள் தங்கள் இயல்புக்கேற்பவும் தம்இருப்பைத் தக்கவைக்கவும்ää எதிர்கால அரசியல்குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் அவை. இவர்களது முடிவுகளைக் கேட்டு நடப்பதும் புறக்கணிப்பதும் தமிழ்மக்களின் விருப்பம்.
தமிழர்கள் மத்தியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, கிழக்கில் மட்டுமுள்ள சில கட்சிகள் என்பவை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபாய வெற்றிபெற வேண்டுமென விரும்புகின்றன. அவரது வெற்றிக்காகவும் களத்தில் நின்று உழைக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அது சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சிசார்ந்த அணியின் பொது வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக வேண்டுமெனத் தம்விருப்பத்தைப் பகிரங்கப் படுத்தியுள்ளன. எனினும் தமிழரசுக்கட்சியோ அது சார்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ இன்றுவரை களத்தில் இறங்கவில்லை.
1956 தொடக்கம் இன்றுவரை இலங்கைத் தமிழரசுக்கட்சியே தமிழ்மக்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற கட்சியாக இருந்து வருகிறது. பின்னாளில் அது தமிழர்விடுதலைக் கூட்டணியாக மலர்ந்தபோதும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாற்றம் பெற்றபோதும் இந்நிலை மாற்றமடையவில்லை. ஏச்சுப்பேச்சுகள் தாராளமாக உலாவந்தாலும் தேர்தல் என்ற வரும்போது தமிழ்மக்கள் இந்த அணியடனேதான் நின்று வருகிறார்கள். எனவே இலங்கைத் தமிழரசுக் கட்சியோ அதுசார்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ தன்முடிவகளை நிதானமாக வெளியிட வேண்டிய அரசியற் சூழல் இருக்கிறது. ஏனெனில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவு தென்னிலங்கையில், அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்கெதிரான அலையைத் தோற்றுவித்து விடமுடியும் என்ற அச்சம் நிலவவே செய்கிறது.
இதனாற்றான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை மிகவும் காலந்தாழ்த்தியே வெளியிடவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மிகக் குறைந்த காலஅவகாசம் இருக்கையிற்றான் மைத்திரியை ஆதரிப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. முடிவை வெளியிடுவதிற் காலதாமதம் இருந்தபோதிலும் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுப்பதிற் சிரமம் இருக்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவை அறிவிக்குமுன்னரேயே மக்கள் தங்களளவில் ஒரு முடிவை எடுத்திருந்தார்கள். அது பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவுடன் ஒத்துப்போவதையும் உணர்ந்து கொண்டார்கள். இந்த ஒரே முடிவுக்குத் தமிழ்மக்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் வருதற்கான சூத்திரம் இலகுவானது. முதல் நிலை யாரை ஆதரிக்கக் கூடாது என்பது. இரண்டாவது நிலை சிங்களமக்களிடம் அதிக வாக்குகளைப் பெறக்கூடிய வேட்பாளர் யார் என்பதும் அவர் தமிழ்மக்களுடன் ஓரளவுக்கேனும் ஒத்துப்போவாரா என்பதுமே. இம்முறைத் தேர்தலுக்கும் இச்சூத்திரம் பொருந்தியே வருகிறது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்முடிவை அறிவித்தாயிற்று. தமிழ்மக்கள் அதனை உணர்ந்து வாக்களிப்பர்கள் என நம்பலாம் .ஏனெனில் பலர் அதே முடிவையே தங்களளவில் எடுத்திருப்பதால் புதிய அழுத்தங்கள் தேவைப்படா. ஆயினும் வேண்டுமானால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு “ஏன் நாங்கள் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கிறோம்?” என்பதை இலகுதமிழில் விளக்கி ஒரு பொதுவான துண்டுப் பிரசுரத்தைத் தமிழர்களிடம் கொண்டு சேர்க்கலாம். அதற்குக் கூட்டமைப்புத் தொண்டர்களை மட்டும் பயன்படுத்தலாம். இவையே போதுமானவை.
இதற்கப்பால், சிலர் விரும்புவதுபோல் சஜித் பிரேமதாசாவின் பிரசுரங்களையும் படங்களையும் ஏந்தி வீடுவீடாகச் சென்று தமிழ்மக்களிடம் சேர்க்க வேண்டிய அவசியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. சஜித்தைப் புகழ்ந்துபாடி அவருக்கே வாக்களியுங்கள் என்று இரக்கவேண்டிய தேவையும் இல்லை. இப்படிச் செய்வதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ பிராந்தியத் தலைமைகளோ முடிவெடுத்தால் அது நிச்சயம் முடிவெடுப்பவர் நன்மை சார்ந்ததாக இருக்குமேயொழியத் தமிழர் நன்மை சார்ந்ததாகவோ கட்சி நன்மை சார்ந்ததாகவோ இருக்கப் போவதில்லை.
ஏனைய கட்சிகளைப் பார்த்து நிறம்பூசிக் கொள்ள வேண்டிய தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. முஸ்லிம் தலைவர்கள் பச்சைத் தொப்பிகளுடன் சஜித்தின் அரங்குகளில் மின்னுவது அவர்கள் பிரச்சினை. அவர்கள் தங்களை எக்கட்சி சார்ந்தவர்கள் என்ற பெயரிட்டு அழைத்துக் கொண்டாலும் சட்டப்படி அனைவரும் ஐக்கியதேசியக் கட்சி சார்ந்தவர்களே. அக்கட்சிச் சின்னத்தின்மூலம் மக்களிடையே வாக்குப் பெற்றவர்களே. எனவே அவர்கள் முரண்பட முடியாது. ஐக்கியதேசியக் கட்சி சொல்பவற்றைச் செய்ய வேண்டியவர்கள்தாம். நாளை ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சி அமையும்போது அமைச்சர்களாகச் சுகம் அனுபவிக்கப் போகிறவர்கள்தாம்..
கோத்தபாயவுடன் நிற்பவர்களில் தமிழர் அமைப்புகள் அவர்களுடன் சங்கமித்தவர்கள் அல்லராயினும் ஏறத்தாழப் பங்காளர்களே. தோத்தபாய வெற்றிபெற்று ஆட்சிபுரிய வாய்ப்பேற்படின் டக்ளஸ் நிச்சயம் அமைச்சர் ஆவார். வரதராஜப்பெருமாள் தேசியப்பட்டியல் பா.உ.வாகி அமைச்சராகவோ அல்லது சக்திமிக்க பதவியாளராகவோ மாறலாம். இவர்கள் தாம்பெறும் பதவிவழிநின்று மக்களுக்குச் சேவை புரிவதே சாலச்சிறப்பு எனுங் கொள்கையாளர்கள். அவர்கள் பார்வையில் அவை சரியானவையுங்கூட.
ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அத்தகைய நிகழ்ச்சி நிரலில் இருக்கப்போவதில்லை. தமிழர் பிரச்சினைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் தீர்வுகாண விழைபவர்கள். உரிமைக்காகக் கைகோப்போம் என்ற கொள்கையுடையவர்கள். எனவே அவர்கள் தமக்குரிய இடைவெளியைக் கௌரவமாகப் பேணுவதுதான் சிறந்தவழி. தற்போது நிலவும் அரசாங்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தனியிடம்பெற்று உயர்ந்து நிற்பதற்கும் இந்த இடைவெளிதான் சிறப்பான காரணம். நக்குண்டு நாவிழவாமை என்பது அரசியலுக்கு மிகப்பெரிய பலம்.
எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்தத் தனித்தன்மை இந்தத் தேர்தலிலும் உயர்நிலையிற் பேணப்படவேண்டும் என்பதே தமிழ்மக்கள் அவா. உள்@ர்த் தலைமைகள் தளம்பினாலும் அவர்களையும் நெறிப்படுத்திக் கட்சியின் தனித்துவத்தையும் தமிழ்மக்களின் அரசியல்அறத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொண்டர்களுக்கும் இருக்கிறது.
10.11.2019.
--கந்தவனம் கோணேஸ்வரன்--
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒரு முடிவை எடுத்தாயிற்று. தேர்தலில் நிற்க முடிந்தவர்கள் நிற்க ஏனையோர் யாரை ஆதரிப்பது என்பதுபற்றியும்ää தேர்தலைப் புறக்கணிப்பது பற்றியும் தத்தம் முடிவை மக்கள்மத்தியில் முன்வைத்து விட்டார்கள். வடபகுதியின் முன்னாள் முதலமைச்சர் விரும்பியவர்களை ஆதரிக்கலாம் என்றும் விட்டு விட்டார்.
இந்த முடிவுகளை யாரும் பிழைசொல்ல முடியாது. அவரவர்கள் தங்கள் இயல்புக்கேற்பவும் தம்இருப்பைத் தக்கவைக்கவும்ää எதிர்கால அரசியல்குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் அவை. இவர்களது முடிவுகளைக் கேட்டு நடப்பதும் புறக்கணிப்பதும் தமிழ்மக்களின் விருப்பம்.
தமிழர்கள் மத்தியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, கிழக்கில் மட்டுமுள்ள சில கட்சிகள் என்பவை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபாய வெற்றிபெற வேண்டுமென விரும்புகின்றன. அவரது வெற்றிக்காகவும் களத்தில் நின்று உழைக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அது சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சிசார்ந்த அணியின் பொது வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக வேண்டுமெனத் தம்விருப்பத்தைப் பகிரங்கப் படுத்தியுள்ளன. எனினும் தமிழரசுக்கட்சியோ அது சார்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ இன்றுவரை களத்தில் இறங்கவில்லை.
1956 தொடக்கம் இன்றுவரை இலங்கைத் தமிழரசுக்கட்சியே தமிழ்மக்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற கட்சியாக இருந்து வருகிறது. பின்னாளில் அது தமிழர்விடுதலைக் கூட்டணியாக மலர்ந்தபோதும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாற்றம் பெற்றபோதும் இந்நிலை மாற்றமடையவில்லை. ஏச்சுப்பேச்சுகள் தாராளமாக உலாவந்தாலும் தேர்தல் என்ற வரும்போது தமிழ்மக்கள் இந்த அணியடனேதான் நின்று வருகிறார்கள். எனவே இலங்கைத் தமிழரசுக் கட்சியோ அதுசார்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ தன்முடிவகளை நிதானமாக வெளியிட வேண்டிய அரசியற் சூழல் இருக்கிறது. ஏனெனில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவு தென்னிலங்கையில், அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்கெதிரான அலையைத் தோற்றுவித்து விடமுடியும் என்ற அச்சம் நிலவவே செய்கிறது.
இதனாற்றான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை மிகவும் காலந்தாழ்த்தியே வெளியிடவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மிகக் குறைந்த காலஅவகாசம் இருக்கையிற்றான் மைத்திரியை ஆதரிப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. முடிவை வெளியிடுவதிற் காலதாமதம் இருந்தபோதிலும் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுப்பதிற் சிரமம் இருக்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவை அறிவிக்குமுன்னரேயே மக்கள் தங்களளவில் ஒரு முடிவை எடுத்திருந்தார்கள். அது பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவுடன் ஒத்துப்போவதையும் உணர்ந்து கொண்டார்கள். இந்த ஒரே முடிவுக்குத் தமிழ்மக்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் வருதற்கான சூத்திரம் இலகுவானது. முதல் நிலை யாரை ஆதரிக்கக் கூடாது என்பது. இரண்டாவது நிலை சிங்களமக்களிடம் அதிக வாக்குகளைப் பெறக்கூடிய வேட்பாளர் யார் என்பதும் அவர் தமிழ்மக்களுடன் ஓரளவுக்கேனும் ஒத்துப்போவாரா என்பதுமே. இம்முறைத் தேர்தலுக்கும் இச்சூத்திரம் பொருந்தியே வருகிறது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்முடிவை அறிவித்தாயிற்று. தமிழ்மக்கள் அதனை உணர்ந்து வாக்களிப்பர்கள் என நம்பலாம் .ஏனெனில் பலர் அதே முடிவையே தங்களளவில் எடுத்திருப்பதால் புதிய அழுத்தங்கள் தேவைப்படா. ஆயினும் வேண்டுமானால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு “ஏன் நாங்கள் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கிறோம்?” என்பதை இலகுதமிழில் விளக்கி ஒரு பொதுவான துண்டுப் பிரசுரத்தைத் தமிழர்களிடம் கொண்டு சேர்க்கலாம். அதற்குக் கூட்டமைப்புத் தொண்டர்களை மட்டும் பயன்படுத்தலாம். இவையே போதுமானவை.
இதற்கப்பால், சிலர் விரும்புவதுபோல் சஜித் பிரேமதாசாவின் பிரசுரங்களையும் படங்களையும் ஏந்தி வீடுவீடாகச் சென்று தமிழ்மக்களிடம் சேர்க்க வேண்டிய அவசியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. சஜித்தைப் புகழ்ந்துபாடி அவருக்கே வாக்களியுங்கள் என்று இரக்கவேண்டிய தேவையும் இல்லை. இப்படிச் செய்வதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ பிராந்தியத் தலைமைகளோ முடிவெடுத்தால் அது நிச்சயம் முடிவெடுப்பவர் நன்மை சார்ந்ததாக இருக்குமேயொழியத் தமிழர் நன்மை சார்ந்ததாகவோ கட்சி நன்மை சார்ந்ததாகவோ இருக்கப் போவதில்லை.
ஏனைய கட்சிகளைப் பார்த்து நிறம்பூசிக் கொள்ள வேண்டிய தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. முஸ்லிம் தலைவர்கள் பச்சைத் தொப்பிகளுடன் சஜித்தின் அரங்குகளில் மின்னுவது அவர்கள் பிரச்சினை. அவர்கள் தங்களை எக்கட்சி சார்ந்தவர்கள் என்ற பெயரிட்டு அழைத்துக் கொண்டாலும் சட்டப்படி அனைவரும் ஐக்கியதேசியக் கட்சி சார்ந்தவர்களே. அக்கட்சிச் சின்னத்தின்மூலம் மக்களிடையே வாக்குப் பெற்றவர்களே. எனவே அவர்கள் முரண்பட முடியாது. ஐக்கியதேசியக் கட்சி சொல்பவற்றைச் செய்ய வேண்டியவர்கள்தாம். நாளை ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சி அமையும்போது அமைச்சர்களாகச் சுகம் அனுபவிக்கப் போகிறவர்கள்தாம்..
கோத்தபாயவுடன் நிற்பவர்களில் தமிழர் அமைப்புகள் அவர்களுடன் சங்கமித்தவர்கள் அல்லராயினும் ஏறத்தாழப் பங்காளர்களே. தோத்தபாய வெற்றிபெற்று ஆட்சிபுரிய வாய்ப்பேற்படின் டக்ளஸ் நிச்சயம் அமைச்சர் ஆவார். வரதராஜப்பெருமாள் தேசியப்பட்டியல் பா.உ.வாகி அமைச்சராகவோ அல்லது சக்திமிக்க பதவியாளராகவோ மாறலாம். இவர்கள் தாம்பெறும் பதவிவழிநின்று மக்களுக்குச் சேவை புரிவதே சாலச்சிறப்பு எனுங் கொள்கையாளர்கள். அவர்கள் பார்வையில் அவை சரியானவையுங்கூட.
ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அத்தகைய நிகழ்ச்சி நிரலில் இருக்கப்போவதில்லை. தமிழர் பிரச்சினைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் தீர்வுகாண விழைபவர்கள். உரிமைக்காகக் கைகோப்போம் என்ற கொள்கையுடையவர்கள். எனவே அவர்கள் தமக்குரிய இடைவெளியைக் கௌரவமாகப் பேணுவதுதான் சிறந்தவழி. தற்போது நிலவும் அரசாங்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தனியிடம்பெற்று உயர்ந்து நிற்பதற்கும் இந்த இடைவெளிதான் சிறப்பான காரணம். நக்குண்டு நாவிழவாமை என்பது அரசியலுக்கு மிகப்பெரிய பலம்.
எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்தத் தனித்தன்மை இந்தத் தேர்தலிலும் உயர்நிலையிற் பேணப்படவேண்டும் என்பதே தமிழ்மக்கள் அவா. உள்@ர்த் தலைமைகள் தளம்பினாலும் அவர்களையும் நெறிப்படுத்திக் கட்சியின் தனித்துவத்தையும் தமிழ்மக்களின் அரசியல்அறத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொண்டர்களுக்கும் இருக்கிறது.
10.11.2019.
கருத்துகள்
கருத்துரையிடுக