எங்கள் திருக்கோணமலை 2
குமரன்மணி
ஒலிகேட்டுக் குலமகளிர் கண்விழிப்பர்
குங்குமத்தில் திலகமிட்டுக் கோலமிட்டு
அழகமைப்பர்
அமரர்கரந்
தொழுதேத்தி அறுமுகனைப் பணிந்திருப்பர்
அரியதிருப் புகழ்பாடி அவன்செவிக்கு தமிழிசைப்பர்
மமதையறு
பார்ப்பனர்கள் மாதவத்தோர் புகழுரைப்பர்
மாதுமையா ளோடமர்ந்து கோணேசர் அருள்சுரப்பர்
இமயமென
உயர்ந்துநிற்கும் தென்கயிலை வாழ்மக்கள்
ஏல்லாமும் பெற்றிருப்பர் இறைதாளைப்
பணிந்திருப்பர்.
உழவர்நெல்
மணிகுவித்து ஊருக்குச் சோறிடுவர்
ஓங்குதிரைக் கடலாடி இளந்தமிழர் மீன்தருவர்
பழகுதமிழ்ச்
சொற்களுக்குப் புலவர்புதுப் பொருளமைப்பர்
பண்பான காதலுக்குக் காளையர்கள் வழிசமைப்பர்
அழகுமயில் போலாடி
அரிவையர்நீள் குழல்முடிப்பர்
அவர்விழியில் மகிழ்ந்தாடி ஆடவர்கள் மனம்பதைப்பர்;
எழுகதிராய்
இசைபாடி இளஞ்சிறுவர் நூல்கற்பர்
என்றுந்திருக் கோணமலை இலங்கிநிற்கும்
வகைநடப்பர்.
மாவலியாள்
ஓடிவந்து தென்புறத்தே வளஞ்சேர்ப்பாள்
மலர்க்காடும் வயற்காடும் மணம்பரப்ப நலங்காப்பாள்
பூவிரித்தாற்
போலவெந்நீர் ஏழ்சுனையாய் அழகுமிழ்வாள்
புதுப்பொலிவாய்க் காயத்திரி அருகிருந்து
அருள்பொழிவாள்
தேவிலக்சுமி
நாராயணர் வடபுறத்தே காவல்கொள்வார்
திருமுத்துக் குமரன்ஊர் நடுவினிலே
கொலுவிருப்பாள்
மேவுபுகழ்
கோணேசர் மலைமீது அமர்ந்தருளும்
மேருதிருக் கோணமலை வாழ்முறையால் நலம்பெருகும்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
கார்த்திகை 2013
கருத்துகள்
கருத்துரையிடுக