இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் திருக்கோணமலை 2

குமரன்மணி ஒலிகேட்டுக் குலமகளிர் கண்விழிப்பர்   குங்குமத்தில் திலகமிட்டுக் கோலமிட்டு அழகமைப்பர் அமரர்கரந் தொழுதேத்தி அறுமுகனைப் பணிந்திருப்பர்   அரியதிருப் புகழ்பாடி அவன்செவிக்கு தமிழிசைப்பர் மமதையறு பார்ப்பனர்கள் மாதவத்தோர் புகழுரைப்பர்   மாதுமையா ளோடமர்ந்து கோணேசர் அருள்சுரப்பர் இமயமென உயர்ந்துநிற்கும் தென்கயிலை வாழ்மக்கள்   ஏல்லாமும் பெற்றிருப்பர் இறைதாளைப் பணிந்திருப்பர். உழவர்நெல் மணிகுவித்து ஊருக்குச் சோறிடுவர்   ஓங்குதிரைக் கடலாடி இளந்தமிழர் மீன்தருவர் பழகுதமிழ்ச் சொற்களுக்குப் புலவர்புதுப் பொருளமைப்பர்   பண்பான காதலுக்குக் காளையர்கள் வழிசமைப்பர் அழகுமயில் போலாடி அரிவையர்நீள் குழல்முடிப்பர்   அவர்விழியில் மகிழ்ந்தாடி ஆடவர்கள் மனம்பதைப்பர் ; எழுகதிராய் இசைபாடி இளஞ்சிறுவர் நூல்கற்பர்   என்றுந்திருக் கோணமலை இலங்கிநிற்கும் வகைநடப்பர். மாவலியாள் ஓடிவந்து தென்புறத்தே வளஞ்சேர்ப்பாள்   மலர்க்காடும் வயற்காடும் மணம்பரப்ப நலங்காப்பாள் பூவிரித்தாற் போலவெந்நீர் ஏழ்சுனையாய் அழகுமிழ்வாள்   புதுப்பொலிவாய...
எங்கள் திருக்கோணமலை – 4 அந்தணர்தம் கைம்மலர்கள் அதிகாலை குவியும்   அம்புயங்கள் ஆதவனின்   வரவுகண்டு மகிழும் செந்தமிழர் தேவாரம் தேனெனவே ஒலிக்கும்   தெருவெங்கும் பூங்காற்று வாசமள்ளிக் குவிக்கும் பந்தெனவே துள்ளிச்சிறார் பாடசாலை செல்லும்   பாங்குகண்டு பெற்றோர்கள் மனமகிழ்விற் துள்ளும் நந்தமிழர் நலங்காக்க அருள்சுரக்கும் முருகன்   நயந்துறையும் திருக்கோண மலையெங்கள் பூமி. அலைவீசும் ஒலியாலே ஆனதமிழ் ஓன்று   அன்பாளர் நாவாலே ஆண்டதமிழ் ஒன்று நிலையான ஏரேற்றி நிமிர்ந்ததமிழ் ஒன்று   நெறிபோற்றும் அறிஞரிதழ் நயந்ததமிழ் ஒன்று கலையாளர் திறனூடே கனிந்ததமிழ் ஒன்று   கயவர்தமை வேரறுக்க எழுந்ததமிழ் ஒன்று விலகாத வள்ளிதெய்வ யானையுட னமர்ந்து   வினையறுக்கும் அறுமுகனாய்ப் பெருகிநின்ற தின்று அருள்முத்துக் குமரனவன் அருகிருக்கக் கண்டு   அடியவர்கள் மனம்நிறையும் நாளும்எழில் கொண்டு திருவளரும் தொழில்வளரும் சிறந்தபண் பாடொடு   சிவநெறியுந் தான்வளரும் இனியதமிழ்ப் பாவொடு வருபகையை வதைத்தோட்டும் வண்டமிழர் திறனால்   வளர்தமிழ...

எங்கள் திருக்கோணமலை 1

கதிவனின் வரவுகண்டு கமலம்முகம் மலரும்   காக்கைகளும் குருவிகளும் குரலெடுத்துப் பழகும் புதியவகை அரும்பெனவே பூசுரர்கை குவியும்   பூமாலை சார்த்தியிறை வழிபாடு தொடங்கும் நதியெனவே சோர்கூந்தல் நங்கையரைப் போற்றும்   நற்கவிஞர் கற்பனைக்குப் புதுமெருகு ஊட்டும் மதிகொண்டு விதிவெல்லும் உத்திகளும் பெருகும்   மாதுமையாள் கோணேசர் மண்ணிலறம் வளரும். செந்தமிழும் சிவநெறியும் தழைத்தினிதே ஓங்கும்   தேவாரப் பண்ணேந்திக் காற்றின்மணம் துலங்கும் வந்தவர்க்கு விருந்திட்டு வரவேற்று மகிழும்   வாயார வாழ்த்தியவர் வாழ்நிலைக்கும் உதவும் நொந்தவர்கள் இங்கெவரும் இல்லையெனப் பகரும்   நுவலரிய தமிழர்தம் பண்பாடு உயரும் எங்கள்திருக் கோணேசர் எழிலாக அமரும்   இந்தமண் கோலேந்தும் நாள்கடிதிற் புலரும். மான்விழியார் அசைவினிலே காளைமனம் மகிழும்   மாமலையும் அவர்முன்னால் சிறுகடுகாய்த் திகழும் மீன்சொரியும் கடலலையும் அன்புமொழி பேசும்   மேவிவரும் தென்றல்காதல் நெஞ்சினிக்க வீசும் தேன்தமிழிற் புனைகவிகள் தமிழர்திறன் காட்டும்   தேவலோகம் எனமயங்கும் வகைய...

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

உயிரீற்று நிலைமொழியுடன் உயிரெழுத்திற் தொடங்கும் வருமொழி இணைதல். நிலைமொழியின் ஈற்றெழுத்து அ > ஆ > உ > ஊ > ஒ > ஓ ஓள ஆகிய ஏழு உயிரோசைகளில் எதனையேனும் கொண்டிருக்குமாயின் வருமொழி உயிரெழுத்திற் தொடங்குமிடத்து ‘ வ ’ கரம் உடம்படு மெய்யாகத் தோன்றி இருமொழிகளையும் இணைக்கும். தகதக + என      = தகதகவென.             பல + அணி   =     பலவணி. விழா   + ஆரம்பம்   = விழாவாரம்பம்.          நிலா +அழகு   =    நிலாவழகு. குபுகுபு + என்று    = குபுகுபுவென்று.         திரு + ஓடு     =    திருவோடு. பூ + ஆரம்       =    பூவாரம்.              கூ + என்றான்   =   கூவென்றான். நொ +அழகு      =   நொவ்வழகு. போ+ என்றாள்   ...

ஜனாதிபதி என்ன செய்யப் போகிறார்?

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மற்றுமொரு செயற்பாட்டை நீதிமன்றம் முடக்கியிருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்றக் கலைப்புக்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்த உச்சநீதிமன்றம் அவரால் நியமிக்கப்பட்ட மகிந்த தலைமையிலான அரசின் நடவடிக்கைக்கும் டிசம்பர் 3 இல் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. அதாவது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரும் அமைச்சர்களும் செயலற்றவர்களாக்கப் பட்டிருக்கிறார்கள். இவையிரண்டும் ஜனாதிபதியின் அரசியல் முன்னெடுப்புகளைக் கேள்விக்குட்படுத்தும் உத்தரவுகளாக அமைந்திருக்கின்றன. ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் செய்த அல்லது செய்யாமல்விட்ட எக்காரியத்துக்கும் எதிராக நீதிமன்றம் செல்லமுடியாது என்றுகூறும் ( 35-1) அரசியலமைப்பின் உறுப்புரையைக் கடந்து நீதித்துறை இவ்விரண்டு தடைகளையும் விதித்திருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஜனாதிபதியின் அதிகாரம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஏவ்வித குழப்பங்களுமின்றிப போய்க் ; கொண்டிருந்த ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசை திடுதிப்பென்று அகற்றித் தன்விருப்பப்படி மகிந்த தலைமையிலான அமைச்சரவையைத் தோற்றுவித்திருந்தார் ஜனாதிபதி சிறிசேன. ஒக்...