தம்பி.தில்லைமுகிலன் நினைவோடு…
(நினைவுக் கவியரங்கத் தொடக்கக் கவிதை) நீண்டபல நாட்களின்பின் நினைவேந்தற் கவியரங்கில் மீண்டும்நான் வந்துள்ளேன் மிக்கபெரு மகிழ்வுகொண்டேன் வேண்டுமொழி தந்துதவும் வாணியன்னை தாள்பணிந்து ஈண்டுநான் பாடலுற்றேன் இசைந்தென்னை ஏற்பீரே. தம்பிதில்லை முகிலன் எனும் தணியாத ஆளுமையின் அங்கமென வாய்த்த இந்த அழகான கவியரங்கை நம்பிநான் தொடக்கி வைக்க நான்பெற்ற சிறப்புயாதோ? தம்பிஎன்னைக் காத்தருள் வாய் தமிழ்ப்புயலே அண்ணாவே. அம்கௌரி தாசன் என்ற அழகான தலைமையின்று எம்முன்னே நிற்கி றது இனியென்ன கவிமழைதான் இம்மென்றால் கவி பாடும் எத்தனையோ கவிஞர் இங்கு எம்மனத்தைக் கொள்ளைகொள்ள இனியதமிழ் படைக்கவுளார். அண்ணாவின் புகழ்சொல்லும் அரியதமிழ்க் கவியரங்கில் என்நாவும் தமிழ்பேச இயன்றதனால் பெருமையுற்றேன் எந்நாளும் அவர்பெருமை இந்தமண்ணில் நிலைத்திருக்க நின்றாடும் அம்பலத்தான் துணையிருப்பான்: கவிதொடர்வோம். அரங்கம் நிறைந்திருக்கும் அறிஞர்பெரு மக்களுக...