இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தம்பி.தில்லைமுகிலன் நினைவோடு…

(நினைவுக் கவியரங்கத் தொடக்கக் கவிதை) நீண்டபல நாட்களின்பின்  நினைவேந்தற் கவியரங்கில் மீண்டும்நான் வந்துள்ளேன்  மிக்கபெரு மகிழ்வுகொண்டேன் வேண்டுமொழி தந்துதவும்  வாணியன்னை தாள்பணிந்து ஈண்டுநான் பாடலுற்றேன்  இசைந்தென்னை ஏற்பீரே. தம்பிதில்லை முகிலன் எனும்  தணியாத ஆளுமையின் அங்கமென வாய்த்த இந்த  அழகான கவியரங்கை நம்பிநான் தொடக்கி வைக்க  நான்பெற்ற சிறப்புயாதோ? தம்பிஎன்னைக் காத்தருள் வாய்  தமிழ்ப்புயலே அண்ணாவே. அம்கௌரி தாசன் என்ற  அழகான தலைமையின்று  எம்முன்னே நிற்கி றது  இனியென்ன கவிமழைதான் இம்மென்றால் கவி பாடும்  எத்தனையோ கவிஞர் இங்கு எம்மனத்தைக் கொள்ளைகொள்ள  இனியதமிழ் படைக்கவுளார். அண்ணாவின் புகழ்சொல்லும்   அரியதமிழ்க் கவியரங்கில் என்நாவும் தமிழ்பேச  இயன்றதனால் பெருமையுற்றேன் எந்நாளும் அவர்பெருமை  இந்தமண்ணில் நிலைத்திருக்க நின்றாடும் அம்பலத்தான்  துணையிருப்பான்: கவிதொடர்வோம். அரங்கம் நிறைந்திருக்கும்  அறிஞர்பெரு மக்களுக...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 03(புணரியல் )

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல்  3. ‘அ’கர, ‘இ’கர வீற்று வினையெச்சங்களை யடுத்து வருமொழி வல்லின எழுத்திற் தொடங்குமாயின் அங்கே வல்லினமெய் தோன்றும். பாட + சொன்னான்.  = பாடச்சொன்னான்.               பாடி + காட்டினான்   =  பாடிக்காட்டினான். நாட + கண்டான்    = நாடக்கண்டான்                       நாடி + செய்தான்    =  நாடிச்செய்தான். மேய + சென்றது    =  மேயச்சென்றது                        பாய +  பயந்தது    =   பாயப்பயந்தது. தேட + கண்டான்    = தேடக்கண்டான்.                      தேடி + சென்றான்   =  தேடிச்சென்றான். மோத + பார்த்தான்   = மோதப்பார்த்தான்   ...

கல்வெட்டு- அமரர் சரவணமுத்து சிவபாதம்.

வெளிப்புற முன்னட்டை                 தெய்வப்படம் திருக்கோணமலை 107, மத்திய வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு மறைந்த அமரர் சரவணமுத்து சிவபாதம் அவர்கள்   பெயரில் யாக்கப்பட்ட அந்தியேட்டி தினமலர். செப்டெம்பர் 20. 2018 வியாழக்கிழமை. விளம்பியாண்டு புரட்டாதித்திங்கள் நான்காம் நாள்.                                                       தோற்றம்                                           ...