பாராட்டுப்பத்திரம்-கலைமாமணி டாக்டர் திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன்
தமிழ் இசையுலகில் புகழ்பூத்த கலைமாமணி டாக்டர் திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசைச்சேவையைப் பாராட்டி “இசைஞான வித்தகி” எனும் சிறப்புப்பெயர் சூட்டித் தென்கயிலை, திருக்கோணமலை மக்கள் சார்பாக, பாலையூற்று பாலமுருகன் ஆலயப் பரிபாலன சபையாரால் 24.02.2018 அன்று பாலமுருகன் முன்னிலையில் வாசித்தளிக்கப்பட்ட,
பாராட்டுப்பத்திரம்
“கண்ணோடு காண்பதெல்லாம்” காதாரக் கேட்கிறது
கடல்கடந்தும் உன்நாமம் இசைமழையாய்ப் பொழிகிறது
விண்ணோடுந் திக்கெட்டும் விரைந்துபுகழ் படர்கிறது
விழியசைவில் சங்கீதம் வீழ்புனலாய் வருகிறது.
பதினான்கு வயதினிலே பாட்டுக்கு இளவரசி
பைந்தமிழர் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் இசையரசி
விதவிதமாய்க் குரல்வளத்தால் இசையுலகில் ஒளிபரப்பும்
விடிகாலை ஆதவனாய் எழுந்ததமிழ்க் குலஅரசி.
இசைஞான வித்தகிநீ இகம்புகழும் சரஸ்வதிநீ
எமையாளுந் தமிழுக்கு அணிசேர்க்கும் பைங்கிளிநீ
திசையாளும் நிலவொளிநீ தீந்தமிழர் இசையளிநீ
திகட்டாக்கரு நாடகத்துத் திகழ்முத்தின் சிரிப்பொலிநீ
வரலாறு உனைப்போற்றும் வளர்தமிழும் உனைவாழ்த்தும்
வையத்துள் இசைவாழும் வரைக்கும்உன் புகழ்வாழும்
உருவெடுத்த கலைமகளாய் உலவுகின்ற தமிழ்மகளே
உளமார வாழ்த்துகிறோம் நெடுங்காலம் வாழ்கவாழ்க.
பணிவன்புடன்,
தென்கயிலை, பாலையூற்று பாலமுருகன்
ஆலயப் பரிபாலன சபையினர்,
திருக்கோணமலை. (இலங்கை)
ஏவிளம்பி, மாசித்திங்கள் 12ஆம் நாள், சனிக்கிழமை.
பாராட்டுப்பத்திரம்
“கண்ணோடு காண்பதெல்லாம்” காதாரக் கேட்கிறது
கடல்கடந்தும் உன்நாமம் இசைமழையாய்ப் பொழிகிறது
விண்ணோடுந் திக்கெட்டும் விரைந்துபுகழ் படர்கிறது
விழியசைவில் சங்கீதம் வீழ்புனலாய் வருகிறது.
பதினான்கு வயதினிலே பாட்டுக்கு இளவரசி
பைந்தமிழர் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் இசையரசி
விதவிதமாய்க் குரல்வளத்தால் இசையுலகில் ஒளிபரப்பும்
விடிகாலை ஆதவனாய் எழுந்ததமிழ்க் குலஅரசி.
இசைஞான வித்தகிநீ இகம்புகழும் சரஸ்வதிநீ
எமையாளுந் தமிழுக்கு அணிசேர்க்கும் பைங்கிளிநீ
திசையாளும் நிலவொளிநீ தீந்தமிழர் இசையளிநீ
திகட்டாக்கரு நாடகத்துத் திகழ்முத்தின் சிரிப்பொலிநீ
வரலாறு உனைப்போற்றும் வளர்தமிழும் உனைவாழ்த்தும்
வையத்துள் இசைவாழும் வரைக்கும்உன் புகழ்வாழும்
உருவெடுத்த கலைமகளாய் உலவுகின்ற தமிழ்மகளே
உளமார வாழ்த்துகிறோம் நெடுங்காலம் வாழ்கவாழ்க.
பணிவன்புடன்,
தென்கயிலை, பாலையூற்று பாலமுருகன்
ஆலயப் பரிபாலன சபையினர்,
திருக்கோணமலை. (இலங்கை)
ஏவிளம்பி, மாசித்திங்கள் 12ஆம் நாள், சனிக்கிழமை.
கருத்துகள்
கருத்துரையிடுக