அரசியற் கட்டுரை - 03- புதிய அரசியலமைப்பில் தம் தலைவிதியை தீர்மானிக்கும் கிழக்கு முஸ்லிம் அரசியல்
புதிய அரசியலமைப்பில் தம் தலைவிதியை தீர்மானிக்கும் கிழக்கு முஸ்லிம் அரசியல்
2017 செப்டெம்பர் 21ந் தேதியன்று பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பக்கான உத்தேச யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கைக்கென வரையப்பட்ட யாப்பு யோசனைகளில் முதன் முறையாக பிரதான இரண்டு சிங்களக்கட்சிகளும் தமிழர்களின் மிகப்பெரிய அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒருமனப்பட்டுச் செயல்பட்டு இணக்கம் காணப்பட்ட அரசியலமைப்புக்கான உத்தேச யோசனைகள் இவையெனில் மிகையன்று.
இத்தகைய யோசனைகள், அச்சொட்டாக இல்லாவிடினும் மேலும் மெருகூட்டப்பட்ட திருத்தங்களுடன் புதிய அரசியலமைப்பாக ஏற்றுக்கொள்ளப்படுதற்கான நிகழ்தகவுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
உத்தேச முன்மொழிவுகள் பற்றி எவர் எத்தகைய பரப்புரைகளைச் செய்தாலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளும், மலையகக் கட்சிகளும் இணைந்து செயல்படுகின்ற, இலங்கை மக்களின் ஏற்பைப்பெற்ற அரசியல் யோசனைகளாக இவை பரிணமித்துள்ளன என்பதை நிராகரிக்க முடியாது.
இவ்வியோசனைகளில் பலவிடயங்கள் உள்ளடக்கப்பட்டாலும் தமிழர்கள்மத்தியிலும் கிழக்கு முஸ்லிம்களின் மத்தியிலும் பேசுபொருளாக முக்கிய இடம்பிடித்திருப்பது வடக்கு, கிழக்கு மகாணங்கள் ஒன்றிணைந்த அரசியல் அலகு என்பதுதான். அரசியல்வாதிகள், குறிப்பாகக் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகச் சூடாகப்பேசி இருசாராருக்கமிடையில் வேறுபட்ட விரோதச் சிந்தனைகளுக்குத் தூபமிட்டு வருகிறார்கள். வடக்கும் கிழக்கும் ஒரே அரசியல் அலகானால் முஸ்லிம்கள் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதுபோல் வலிந்து பரப்புரை செய்கிறார்கள்.
இவர்களின் பேச்சை நம்புகின்ற முஸ்லிம் மக்களில் ஒருசாராரும், தமிழர்கள் வாழ்வு தங்கள் கைகளிலே தங்கியிருப்பதாகப் பாவனை பண்ணிக்கொண்டு, வடக்குடன் கிழக்கு இணைவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்று தங்களாலான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். தங்கள் நடவடிக்கைகளுக்க நியாயம் சேர்ப்பதாக எண்ணிக்கொண்டு, யுத்தகாலங்களில் தமிழர்தரப்பால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற முஸ்லிம்களின் துயரங்களையும் துருவியெடுத்து விளம்பரம் செய்தும் வருகிறார்கள்.
தமிழர்தரப்போ, முஸ்லிம்களையும் அணைத்துச்செல்வதே சிறந்த அரசியல்தீர்வுக்கான ஒரேமார்க்கம் என்ற நிலைப்பாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடங்கிய 1949ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தெளிவாகவே இருந்துவருகிறார்கள். ஆயுதந்தரித்த இளைஞர்களால் முஸ்லிம் மக்களுக்குக் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட துயரங்களுக்குக் கவலை தெரிவித்தும், வேண்டிய இடத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டும் முஸ்லிம்கள்மீது தங்களுடைய கரிசனையை வெளிப்படுத்தி வருகிறார்கள். யார்மீது சரி அல்லது பிழை என ஆராயாது கசப்பான சம்பவங்களை மறந்து இருபகுதியாரும் இணைவது எதிர்காலச் சந்ததியினருக்கு நன்மை பயக்குமென நம்புகிறார்கள்.
அரசும் தமிழர்களும் மோதிக்கொண்டபோது அதனைப் பயன்படுத்தி அரசியல் லாபமும் பொருளாதார லாபமும் பெற்றுக்கொண்டு முஸ்லிம்கள் உயர்ந்தார்கள் என்பது பற்றித் தமிழர்கள் எந்த மேடையிலும் பேசியதில்லை. தாங்களும் ஒடுக்கப்பட்ட இனமாக இருந்தபோதும் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழர் போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் குந்தகம் செய்தார்கள் என்பது பற்றியும் தமிழர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. அமைச்சுப் பதவிச் சுகபோகங்களுக்கு அடிமைப்பட்ட மயக்கத்தில் ஐ.நா. வரை சென்று அரசுக்கு வக்காலத்துவாங்கிப் போராட்ட நியாயங்களை மழுங்கடிக்க முயன்றார்கள் என்பது பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை.
ஆயுதப்போராட்டக் காலங்களில் தமிழர்களது போராட்ட வேகத்தைச் சிதைப்பதற்காக அரசால் தோற்றவிக்கப்பட்ட முஸ்லிம் ஊர்காவல்படையில் ஆர்வத்துடன் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்தமை பற்றியோ, அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டி அரசநலன்களைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் பற்றியோ தமிழர்கள் வாய் திறப்பதில்லை.
முஸ்லிம் ஊர்காவற்படையினர் தமிழர்களுடன் அடாத்தான சண்டித்தனம் செய்திராவிட்டால் அவர்கள் விடுதலைப்புலிகளால் கடத்தப்படவோ அழிக்கப்படவோ வாய்ப்பு ஏற்பட்டிருக்கமாட்டாது என்பதைக்கூடத் தமிழர்கள் சொல்லிக் கொண்டிருப்பதில்லை.
முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான பிளவை விதைத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஊர்காவற்படையினரும்தான் என்ற தெட்டத்தெளிவான உண்மையைக்கூடத் தமிழர் தரப்பு அழுத்திச் சொல்ல விரும்புவதில்லை. இவ்வாறு சொல்வது தமிழர் முஸ்லிம் உறவை மேலும் சீர்குலைத்து, இருசாராரினதும் எதிர்காலச் சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள் என்பதே தமிழர் வாதமாக இருந்து வருகிறது.
தமிழர்கள் இவ்வளவு விட்டுக்கொடுப்புடன் நடந்தும் முஸ்லிம்தரப்பு இதனைப் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. தமிழர்களை எதிர்ப்பதொன்றே தங்கள் அரசியல் என்று நம்பிச் செயல்படுகிறார்கள். கடந்த காலங்களில் காட்டிக்கொடுப்புகள் மூலம் பொருளாதாரத்தைப் பெருக்கி வாழ்ந்தது போல் இனியும் வாழலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் வடக்கும் கிழக்கும் இணையவிடமாட்டோம் என வெற்றுக்கூச்சல் போடுகிறார்கள்.
வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக அமைவதுபற்றி உத்தேச அரசியலமைப்பில் மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1. மக்கள் தீர்ப்பின்படி ஒரே அலகாகலாம்
2. இணப்புப்பற்றி அரசியலமைப்பு எந்த நடவடிக்கையையும்; மேற்கொள்ளாது விடலாம்.
3. அரசியலமைப்பின் பிரகாரம் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக அமையலாம்.
இவற்றுள் முதலாவது யோசனையான மக்கள் தீர்ப்பை நம்பித்தான் கிழக்கு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்கள் ஆதரவு இல்லாவிட்டால் தமிழர்கள் தாழ்ந்து போய் விடுவார்கள் எனவும் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். எழுபது ஆண்டுகளாய்த் தமிழரையும் சிங்களவர்களையும் ஏய்த்துப் பிழைத்ததுபோல் இனிமேலும் நடந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கிறார்கள். மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப் போவதாகவும் சொல்கிறார்கள்.
முஸ்லிம்களின் பிரதான தொழிலான வியாபாரம் முற்றுமுழுதாகச் சிங்களவர்களையும் தமிழர்களையும் நம்பித்தான் இன்றுவரை இடம்பெறுகிறது. அவர்களிடம் காணப்படும் பணம் அத்தனைக்கும் இவ்விரு சாராருமே காரணம். வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம் வியாபாரிகளின் வருமானம் முழுவதும் தமிழர்களிலேயே தங்கியிருக்கிறது. இதை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மறந்து விடக்கூடாது.
அரசியல் ரீதியாகக்கூடத் தமிழரும் சிங்களரும் முரண்படுகின்ற காலம்வரைக்கும்தான் முஸ்லிம்களுக்கு வாழ்வு. நாளை பிரச்சினைகள் தீர்ந்து விட்டால் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வேண்டாத குழுமமாக மாறிவிடும் ஆபத்து முஸ்லிம்களுக்கு இருக்கிறது. தமிழர்களும் சிங்களவர்களும் மனந்திறந்து கைகோத்துக் கொள்வார்கள். ஒரே ஆலயத்தில்கூடி இறைவனை வழிபடுவார்கள். தமிழர்களும் விகாரைகளுக்குச் சென்று புத்தபெருமானை வணங்குவார்கள். ஒருவர் வீட்டில் மற்றவர் விருந்துண்பார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் இறுதித் தருணத்திலும் தமிழர்களின் காலைவாரிவிடும் அரசியல் செய்வார்களாயின் சீர்செய்யமுடியாத சிக்கலில் மாட்டிக்கொள்வது தவிர்க்க முடியாதாகிவிடும். ஒருவேளை கிழக்கைப் பிரித்து வைக்கும் முஸ்லிம்களின் ஆதங்கம் நிறைவேறுமாயின் தமிழர்களும் தங்கள் முடிவைச் சடுதியாக மாற்றிக் கொள்ளக்கூடும்.
தமிழரும் சிங்களரும் ஒன்றாக இணைந்து கிழக்குமாகாண ஆட்சியைக் கைப்பற்றுவார்கள். அப்போது முஸ்லிம்கள் ஆட்சித்துறையினின்றும் அந்நியப்பட்டுப் போவார்கள். மாகாண மந்திரிப்பதவிகூட அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. ஏற்கனவே முஸ்லிம்கள்மேல் சிங்களவர்கள் கொண்டிருக்கும் வெறுப்பைத் தமிழர்கள் சாதகமாக்கிக் கிழக்கின் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்வார்கள். நம்பிக்கையற்ற கூட்டமாகக் கிழக்குமுஸ்லிம்கள் தமிழர்களாலும் சிங்களவர்களாலும் ஒதுக்கப்படுவார்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தமிழர்களால் திட்டமிட்டுப் பரந்த அளவில் ஒதுக்கப்படும். முஸ்லிம்கள் தங்கள் கடைகளைக் காத்தான்குடியிலும், கிண்ணியாவிலும் முடக்கிக் கொள்ளவேண்டி ஏற்படும். தமிழர்களிடம் உழைத்துத் தமிழர்நிலங்களிலே வாங்கப்பட்ட சொத்துகளைப் பராமரிக்க முடியாமல் விற்றுவிட்டுச் சொந்த ஊர் திரும்புமளவுக்கு அவர்கள் நிலைமை மோசமடையும். கிழக்கு முஸ்லிம்களால் தமிழர் தாயகத்துக்கு வெளியே பெரிய வியாபாரங்களைச் செய்வதற்குச் சிங்களவர்களும் அனுமதிக்கப் போவதில்லை. அந்தரித்த ஒருநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு வெளிமாவட்ட முஸ்லிம்களும் ஒத்துழைக்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் சிங்களரின் கோபத்தை நியாயமான காரணங்களின்றிச் சுமக்க மாட்டார்கள். மொத்தத்தில் கிழக்கு முஸ்லிம்கள் இனவாதம் பேசிக்கொண்டு அரசியலிலும் பொருளாதாரத்திலும் தாழ்ந்து போகவேண்டி நேரிடும்.
இவற்றைத் தவிர்ப்பதாயின் தமிழர்களுடன் சேர்ந்து இறுதிக் கட்டத்திலாவது முஸ்லிம்கள் வெளிப்படையான மனதுடன் இயங்கவேண்டும். அவர்களின் அரசியற் பொருளாதாரப் பாதுகாப்பு, தமிழர்களுடன் சேர்ந்து நடைபோடுவதிலேயே தங்கியிருக்கின்றது என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும். தமிழர்கள் ஒருபோதும் முஸ்லிம்களை நம்பிப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. அவர்கள் தங்கள் பலத்தையும் ஒற்றுமையையுமே நம்பிச் செயல்பட்டார்கள். இழப்புகளைச் சந்தித்த போதும மனந்தளராமற் போராடினார்கள். முஸ்லிம்களின் காட்டிக் கொடுப்புகளால் சில தடைகளை எதிர்கொண்டபோதும் விடாமுயற்சியால் இன்று வெற்றிப்படியைத் தொட்டிருக்கிறார்கள்.
நேர்மையான எதிரி: உண்மையான நண்பன்: பெருந்தன்மையான உறவினன் என்ற கருத்து தமிழர்கள் பற்றிச் சிங்களவரிடையேயும், சிங்களவர்கள் பற்றித் தமிழரிடையேயும் ஆழமாகப் பரவியிருக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் நயவஞ்சகமான நண்பர்களாகவும். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளாகவுமே தமிழர்களுடனும் சிங்களவர்களடனும் நடந்து காரியத்தைச் சாதிக்கிறார்கள் எனத் தமிழர்களும், சிங்களவர்களும் நம்புகிறார்கள்.
முஸ்லிம்கள் தங்கள் ஏமாற்று அரசியல் வியாபாரத்தை கைவிட்டுவிட்டு இனிமேலாவது திருந்தி நடக்க முயலவேண்டும். அதுதான் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கவல்லது.
29.09.2017
நல்ல பதிவு, சிறந்த விளக்கம்.
பதிலளிநீக்குநல்ல பதிவு, சிறந்த விளக்கம்.
பதிலளிநீக்கு