எல்லாமிருக்கு இவ்வாழ்க்கையிலே
எல்லாமிருக்கு இவ்வாழ்க்கையிலே படுக்கப் பாயுண்டு பாசமுள்ள மனைவியுண்டு குடிசை வீடெனினும் குந்தவோர் இடமுண்டு தடுக்கி வீழ்கையிலே தாங்கநல்ல உறவுண்டு துடுக்காய்ப் பேசியெனை மகிழ்விக்கப் பேரனுண்டு. போக்கு வரத்துக்குப் பொருத்தமான வண்டியுண்டு தேக்கு மரம்போலே தேகத்தில் வலுவுண்டு நாக்குப் பிறழாத நச்சென்ற சொல்லுண்டு யார்க்கும் அஞ்சாமல் வாழ்கின்ற திறனுண்டு. கண்ணில் தெளிவுண்டு கருத்திலும் நோக்கமுண்டு வண்ணத்தை முதுமையிலும் வரவழைக்கும் மனமுண்டு எண்ணம் போலெனக்கு எல்லாமே இங்குண்டு எல்லா மிருக்குஇவ் வாழ்க்கையிலே எனக்கென்று.. கந்தவனம் கோணேஸ்வரன். 28.11.2019