தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 8
தமிழ் இலக்கணம் பதவியல். இயல் 2, பகுதி 8 வழக்கு நாம் பேசும்போதும் எழுதும்போதும் பலவிடயங்களை வெளிப்படையாகப் புலப்படுத்துகிறோம். சிலவற்றைப் பண்பாடு கருதியோ, மரியாதை கருதியோ வெளிப்படையாகக் குறிப்பிடாமல் அவற்றுக்குப் பதிலாக வேறு உத்திகளைக் கையாளுகிறோம். இந்த நடைமுறை மொழிமரபின் பாற்பட்டதாகும். அதுமாத்திரமன்றி, நாம் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தையும் அச்சொட்டான இலக்கணரீதியாகப் பயன்படுத்துவதுமில்லை. இவ்வாறான நடைமுறைகளை இலக்கணநூலார் வழக்கு என அழைப்பர். வழக்கு என்பது இயல்புவழக்கு, தகுதிவழக்கு என இவை இருவகைப்படும். இயல்பு வழக்கானது, இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என மூவகைப்படுகின்றது. அதேபோல் தகுதிவழக்கும், இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூவகைப்படுகின்றது. இயல்புவழக்கு. நாம் இயல்பாகப் பயன்படுத்துகின்ற சொற்கள் இயல்புவழக்கு எனப்படுகின்றன. ‘பட்’டென்று போட்டு உடைத்துவிடும் வழக்கு எனவும் இதனைக்கூறலாம். இவ்வாறு சொற்களைக் கையாளும்போது இலக்கணச் சொற்களாகவோ, இலக்கணப் போலிகளாகவோ, மரூஉச் சொற்களாகவோ அவை அமைகின்றன. 1. இலக்கணமுடைமை. இந்த வகைக்குள் ...