இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாராட்டுப்பத்திரம்-கலைமாமணி டாக்டர் திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன்

தமிழ் இசையுலகில் புகழ்பூத்த கலைமாமணி டாக்டர் திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசைச்சேவையைப் பாராட்டி “இசைஞான வித்தகி” எனும் சிறப்புப்பெயர் சூட்டித் தென்கயிலை, திருக்கோணமலை மக்கள் சார்பாக, பாலையூற்று பாலமுருகன் ஆலயப் பரிபாலன சபையாரால் 24.02.2018 அன்று பாலமுருகன் முன்னிலையில்  வாசித்தளிக்கப்பட்ட,                                       பாராட்டுப்பத்திரம் “கண்ணோடு  காண்பதெல்லாம்”  காதாரக்  கேட்கிறது கடல்கடந்தும்  உன்நாமம்  இசைமழையாய்ப்  பொழிகிறது விண்ணோடுந்  திக்கெட்டும்  விரைந்துபுகழ்  படர்கிறது விழியசைவில்  சங்கீதம்  வீழ்புனலாய்  வருகிறது. பதினான்கு  வயதினிலே  பாட்டுக்கு  இளவரசி பைந்தமிழர்  நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் இசையரசி விதவிதமாய்க்  குரல்வளத்தால்  இசையுலகில்  ஒளிபரப்பும் விடிகாலை  ஆதவனாய்  எழுந்ததமிழ்க்  குலஅரசி. இசைஞான  வித்தகிநீ  இகம்புகழும்...

இந்துசமயவிளக்கம் 8.

கடவுளர் சிலைகளையும் மனிதர்கள்தாமே ஆக்குகின்றார்கள். மனிதர்களால் ஆக்கப்பட்ட சிலைகளை வழிபடுவதிற் பயனுண்டா? எங்கள் நாட்டின் தலைவரை நாங்கள்தாம் வாக்களிப்பின்மூலம் உருவாக்குகிறோம் என்பதற்காக அவருக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கலாமா? சாதாரண மனிதர் ஒருவர் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஆகின்றார் என்று வைத்துக்கோள்வோம். தேர்தலுக்கு நிற்கின்றபோதே அவருக்கு ஒரு கம்பீரம் சேர்ந்து விடுகிறது. வாக்கு முடிவுகள் வெளியானதும் அவருக்கு மரியாதை சேர்ந்து விடுகிறது. பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், அவருக்க அதிகாரம் சேர்ந்து விடுகிறது. சாதாரண மனிதராகத் தெருவில் நடந்து சென்றபோது அவரைக் கண்டுகொள்ளாத மக்கள், ஜனாதிபதியாகி ஊருக்கு வருகிறார் என்றதும் வீதி இருமருங்கிலும் நின்று வரவேற்புக் கொடுப்பதில்லையா? அவருடன் பேசத் துடிப்பதில்லையா? அவர் கண்களிற் படுவதைப் பெருமையாகக் கருதுவதில்லையா? நாம்தானே ஜனாதிபதியை ஆக்கினோம் என்று எவரும் அலட்சியம் காட்டுவதில்லையே! இதேபோல்தான் கடவுளர் சிலைகளும். வெறும் கல்லாக இருக்கும்போது அதற்கு விசேச மதிப்பு எதுவும் இருப்பதில்லை. சிற்பாச்சாரியாரால் கடவுள்சிலை செய்வதற்குப் ப...