வெருகற்பத்து 02 - வேலனுக்கு அரோகரா.....

                     வேலனுக்கு அரோகரா..

வேலனுக்கு  அரோகரா  சொல்லுங்கள்  -- அவன்
வேண்டுகின்ற  வரம்தருவான்  நம்புங்கள்
கோலமயில்  வாகனனைப்  பாடுங்கள்  -- சேவல்
கொடியுடனே  துணைவருவான்  பாருங்கள்.

கானமயில் ஏறிக்கந்தன்  வந்திடுவான்  -- நாங்கள்
காணும்வண்ணம்  எங்கள்முன்னே நடந்திடுவான்
பானைவயிற்றுக்  கணபதியும்  துணைவருவான்  -- காட்டுப்
பாதையிலே  துயர்வராமற்  காத்திடுவான்.

வெருகலாற்றங்  கரைதனிலே  அமர்ந்திருப்பான்  -- முருகன்
வில்லூன்றிக்  கந்தனாக  வடிவெடுப்பான்
அருள்பொழியச்  சந்நிதியைத்  தேர்ந்தெடுப்பான்  -- அங்கு
அன்னதானக்  கந்தனாக  மகிழ்ந்திருப்பான்

ஆறுமுகக்  கடவுளாக  உரு  வெடுப்பான்   --  எங்கள்
அவ்வைக்காகச் சிறுவனாகித்  தமிழ்  வளர்ப்பான்
மாறுபடு  சூரனையே  வதைத்  திருப்பான்  --  எங்கள்
மாவலியாள்  தீரத்திலே  கொலு விருப்பான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5