குறளோடு கவிபாடு 12

திவ்விய கவிச்சோலை. திங்கள் கவிதை.


குறளோடு கவிபாடு 12


அவையை நோக்கி அதன்நிலை யறிந்து
சுவைபட வுரைத்தல் சிறப்புடை நிலையே.

பொருத்தம் பார்த்துப் பகரார் வாழ்வில்
வருத்தம் சேர்தல் வாய்த்திடு மாமே.

இடமும் பொருளும் இசைவும் அறிந்தால்
தடமது புரளும் நிலையும் இலையே.

வழுவில் வார்த்தை வழங்கிடு வோர்பின்
பழுதற உலகம் பணிந்து வருமே.

சொல்லின் பெருமை சொல்பவர் உணரின்
அல்லல் ஏது? அனைத்தும் நலமே.


கந்தவனம் கோணேஸ்வரன்.
28.01.2010

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5