இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கியத்துளி 11.

இலக்கியத்துளி 11. திருக்குறளின் பெருமையோ சொல்லுந்தரமன்று. அதனாற்றான் அதனை உலகப் பொதுமறை எனக் கருதுகிறார்கள். தமிழன் சிந்தனையின் சிறப்புக்குத் திருக்குறள் ஒரு மகத்தான எடுத்துக்காட்டு. வள்ளுவத்தின் விடயப்பரப்பைச் சொல்லவந்த ஒளவையார்: “தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் -- கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.” இதன் பொருள், “ திருவள்ளுவரின் குறளும், இருக்கு, யசுர், சாம, அதர்வணம் ஆகிய நான்குமறைகளின் முடிவும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரப் பொருளும், மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருமூலர் தந்த திருமந்திரமும் ஒரே பொருளைக் கொண்டவை என்பதாகும். திருக்குறளின் ஆளுமைபற்றிச் சொல்லவந்த ஒளவையார், “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக்  குறுகத் தரித்த குறள்.” என இரண்டே அடிகளிற் கூறிவிடுகிறார். அணுவைத் துளைக்கலாம் என்று ஒளவையார் கூறியகாலத்தில் நிலவிய அறிவியல் ஞானம் அணுவைத் துளைக்க முடியாது என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் நம் கிழவியோ அப்போதே அணுவைத் துளைக்கலாம் என்று கூறியமை தமிழனின் அறிவுத் திறனுக்க...