இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் திருக்கோணமலை 19

எங்கள் திருக்கோணமலை 19 அதிகாலை அழகுதமிழ் அணங்குகளின் விழிமலரும்  அதுகண்டு வண்டினங்கள் தேனருந்த ஆர்ப்பரிக்கும் இதுபூவோ இளநிலவோ என்றுசில மயங்கிநிற்கும்  இருவிழிகள் அசைகையிலே கருவண்டோ எனத்தயங்கும் இதமான கடற்காற்று இளமேனி தழுவிவரும்  இளமங்கை எழில்கண்டு அதுகூடக் கவியிசைக்கும் பதமான பண்ணொலிகள் செவியேறிக் களிப்பூட்டும்  பைந்தமிழர் மண்காக்கும் கடமைக்கு வலுவூட்டும் எழுந்துவரும் கடலலையும் இன்தமிழால் ஓசையிடும்  எமதீசன் பதங்கழுவித் தினந்தோறும் பூசையிடும் வளர்ந்துவரும் இளந்தமிழர் வாழ்முறையோ கோடிபெறும்  வளர்சைவத் தமிழுக்குத் தினம்மேன்மை கூடிவரும் இழந்தநலம் அனைத்தையுமே இளைஞர்பலம் மீட்டுத்தரும்  எங்கள்தமிழ் வரலாற்றைப் பெருமையுடன் பேசவரும் பழந்தமிழர் பதியெங்கள் திருக்கோண மலையென்றும்  பாரெங்கும் புகழ்பெறவே பரம்பொருளும் துணையிருக்கும். சுடுகின்ற எழுநீரும் தமிழர்மன நிலைசொல்லும்  சுதந்திரமாய் ஐங்கரனார் அமைகாலம் இனிவெல்லும் நெடுந்தூரம் நடந்தகளை நிழல்வந்தால் மறைந்தொழியும்  நீதிநெறி நடப்போர்க்கு நிறைபொருளும் அருள்பொழியும் படுந்துயரம...