இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்துசமய விளக்கம் 11

இந்துசமய விளக்கம் 11 சமய அனுட்டானங்கள், திருமுறை ஓதல் என்பவையின்றி இறைவனை வழிபட முடியுமா? அப்படி வழிபடுவதை இந்துசமயம் ஏற்றுக் கொள்கிறதா? எதற்கும் ஒரு நியமம் உண்டு. சமய அனுட்டானமும் அப்படித்தான். காலையில் நித்திரை விட்டெழும் ஒருவர், காலைக்கடன்களை முடித்து, குளித்து, சுத்தமான ஆடையணிந்து, தன்பணி தொடங்க வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும். ஆனால், எல்லோரும் இந்நியதிப்படிதான் செயல்படுகிறார்கள் என்ற சொல்ல முடிகிறதா? அவரவர் உடல்நிலை, சூழ்நிலை, காலநிலை, மனநிலை என்பவற்றை அனுசரித்து, இவற்றுள் வேறுபாடுகள் தோன்றுவதில்லையா? அதனால் அவர் உலகப்பணிகளுக்கு உகந்தவர் அல்லர் என்று ஆகிவிட மாட்டார். இதேபோல்தான் சமய அனுட்டானங்கள், திருமுறையோதல் என்பவையும் விதிக்கப்பட்டுள்ளன. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள், இவற்றைக் கடைப்பிடிப்பது உத்தமம்.  பாடசாலைக்கு வருவதற்கென மாணவர்களுக்கு ஒழுங்குமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை பொதுநன்மை கருதியவையாகும். இவை கல்வியாவதில்லை. கல்விக்கான தூண்டுதல்களே இவை.  இதேபோன்றுதான் சமயஅனுட்டானங்களும், பொதுநன்மை கருதியும், உளத்தூய்மையும் நல...