இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துயரப் பொங்கல்.

துயரப் பொங்கல்.                                       வெள்ளத்தால் வாடியொரு பொங்கல்                                       வேதனையால் விம்மியொரு பொங்கல்                                       உள்ளத்தால் வருந்தியொரு பொங்கல்                                       உணர்வுகளை அள்ளியொரு பொங்கல்                                       துள்ளித்தான் பல்கலைக்குச் சென்று                                       துயருற்றுச் சிறையினிலே இன்று...

மக்கள் திலகம்.

மக்கள் திலகம். ஏழை மக்கள் வாழ்வு மலர  ஏணி யாக நின்றவர் கோழைத் தனங்கள் இல்லா அன்புக்  கொள்கை யாலே வென்றவர். பசியை உணர்ந்தும் படிப்பை இழந்தும்  பண்பின் வழி வளர்ந்தவர் வசைவு இல்லா வாழ்க்கை முறையை  வறுமை யிலுந் தேர்ந்தவர். தாயின் தாளை வணங்கி நாளைத்  தொடங்கு கின்ற பண்பினர் கோயில் கூடத் தாயின் அன்புக்   கோட்ட மென்றே வாழ்ந்தவர். நடிப்பின் மூலம் இளைஞர் தம்மை  நல்வழிக் குக் கொணர்ந்தவர் நடிக்கும் ஆட்சி யாளர் போக்கை  நிமிர்ந்து நின்று எதிர்த்தவர். உழைத்த பொருளை ஊருக் களித்து  உவகை கொண்டு வாழ்ந்தவர் மழைக்கு நிகராய் மண்ணில் கொடுத்த   மாண்பி னாலே சிறந்தவர். விழியில் வழியும் துளிநீர் கூட  உலகை வருத்தும் என்றவர். விழிநீர் மக்கள் மழையாய்ப் பொழிய  உலகை நீங்கிச் சென்றவர். புரட்சி நடிகர் பொன்மனச் செம்மல்  மக்கள் திலகம் ஆனவர். புரட்சித் தலைவர் ஆகி ஆட்சியில்  புதுமை செய்தே போனவர். இன்னும் பலநூ றாண்டு அவர்புகழ்  இந்த மண்ணில் வாழும் எளிமை, இனிமை, இர...