இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 7

பதவியல் 7 தமிழ்ச் சொற்களை இயற்சொல், திரிசொல். வடசொல், திசைச்சொல் என நான்கு வகையாகவும் பிரிப்பர் அறிஞர். இயற்சொல். தமிழ்மொழி பேசுகின்ற அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில்  நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் இயற்சொற்கள் எனப்படுகின்றன. ஆழமான முயற்சிகள் எதுவுமின்றிப் பாமரனும் படித்தவனும் இயற்சொற்களை விளங்கிக் கொள்ள இயலும். “நான் வந்தேன்.” “அவன் போனான்.” “அம்மா என்னை அழைத்தார்.” போன்ற வசனங்களில் வருகின்ற சொற்கள் அனைத்தும் எல்லோராலும் விளங்கிக் கொள்ளத்தக்கனவாக அமைந்தள்ளன. எனவே இவை இயற்சொற்கள் எனப்படுகின்றன. ஆடு, மாடு, கோழி, தம்பி, அண்ணா, வானம், பூமி, காற்று ஆகிய பெயர்ச்சொற்களும், வா, நின்றான், படிப்பாள், சாப்பிடு, ஓடு, நட போன்ற வினைச்சொற்களும் இவ்வகையைச் சார்ந்தன. பயன்படுத்தப்படும் இடங்களில் சொல்லவந்த கருத்தை மயக்கமின்றித் தெளிவாகச் சொல்கின்ற தன்மை இயற்சொற்களுக்கு உண்டு. திரிசொல். சாதாரண மக்களன்றிக் கல்வி அறிவுடைய மக்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக்கூடிய தமிழ்ச்சொற்கள் திரிசொல் எனும் பிரிவுக்குள் வருகின்றன. “பேசினான்.” எனும் இயற்சொல்லை “நவின்றான், பகன்ற...

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 6

பதவியல் 6 திணை . திணை என்பது வகுப்பு அல்லது பிரிவு எனப் பொருள்படும். இலக்கணநூலார். மனிதர்களையும் மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் எனக் கருதப்பட்ட தேவர், அசுரர், கடவுளர் என்பவர்களையும் உயர் திணையாகவும், ஏனையவற்றை உயர்திணை அல்லாதனவாகவும் பிரித்துள்ளனர். உயர்திணை அல்லாதவை அஃறிணை எனப்படுகின்றன. உயர்திணையின் நடவடிக்கைகளைக் குறிக்கும் வினைச்சொற்கள் உயர்திணை சார்ந்தும் .அஃறிணைக்குரிய வினைகள் அஃறிணை சார்ந்தும் இருப்பது தமிழ்வழக்கு. மனிதன் ஓடினான். பூனை ஓடியது, அவர்கள் வந்தனர், அவை வந்தன போன்ற வாக்கியங்களை எடுத்துக் கொண்டால், மனிதன், அவர்கள் என்பவை உயர்திணை வினைச்சொற்களிலும், பூனை, அவை போன்றவை அஃறிணை வினைச்சொற்களிலும் நிறைவு பெறுவதை அவதானிக்கலாம். எனினும் சிலஇடங்களில் இவ்விதி குழப்பமடைவதுமுண்டு. எடுத்துக்காட்டாக, குழந்தை, தெய்வம் என்பவை உயர்திணை வகுதிக்குள் வருகின்ற பெயர்கள். ஆனால் அவை வினைச்சொல் பெறுமபோது. குழந்தை விளையாடுகிறது, தெய்வம் எம்மைக் காக்கின்றது என அஃறிணை விகுதி பெறுகின்ற வினைகளையே ஏற்கின்றன. அதேபோல் சூரியன் உதித்தது சூரியன் உதித்தான் என்பதில் இருவகை வினைகளும்...